search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 days work plan scandal"

    100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு கூறினர். #Ruralworkplan

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக் குட்பட்ட 10 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் வேலை பார்த்து வந்தனர்.

    ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இவர்களுக்கு பணி வழங்கவில்லையாம்.

    இது தொடர்பாக 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கூறும் போது, ‘‘எங்களுக்கு வேலை கொடுக்காமல் வேலைக்கு சென்றது போல் பலர் வங்கி கணக்கில் பணம் வரவாகி உள்ளது. இது எப்படி என்று தெரியவில்லை. பின்னர் தொழிலாளர்களுக்கு நூறோ... இரு நூறோ... கொடுத்து விட்டு மீதி பணத்தை அதிகாரிகளே வாங்கி கொண்டனர்’’ என்று புகார் கூறினர்.

    மேலும் இது பற்றி தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் கேட்ட போது, தொழிலாளர்கள் கணக்கில் பணம் எடுக்கப்பட்டு ஜே.சி.பி.க்கு கொடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினார்களாம்.

    எனவே வேலையே தராமல் எப்படி அரசு பணத்தை தொழிலாளர்கள் கணக்கில் செலுத்தப்பட்டது? இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு கூறினர்.

    இது தொடர்பாக சுமார் 500 தொழிலாளர்கள் பவானி சாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரத்துடன் திரண்டு தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் சில தொழிலாளர் பிரதிநதிகளுடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கூறினார். #Ruralworkplan

    ×