என் மலர்
நீங்கள் தேடியது "ரவை சமையல்"
- டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த தோசையை சாப்பிடலாம்.
- காலையில் குறைந்த நேரத்தில் சத்தான டிபன் செய்ய நினைப்பவர்கள் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - கால் கிலோ
அரிசி மாவு - கால் கப்
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கோதுமை ரவையை நன்றாக கழுவி கொள்ளவும்.
ஒரு மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும்.
அடுத்து அதில் கழுவிய கோதுமை ரவையை போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, பொடியாக நறுக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 15 நிமிடம் ஊற விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான டிபன் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை ரவை உகந்தது.
- டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவை உணவுகளை எடுத்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
வரமிளகாய் - 2
இஞ்சி - சிறிது
தேங்காய் துருவல் - அரை கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
* இஞ்சியை தட்டி வைத்து கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, வரமிளகாய், தட்டி வைத்த இஞ்சியை போட்டு தாளித்த பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, ஒரு முறை கிளற வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
* வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
* தண்ணீர் கொதித்ததும், அதில் வறுத்த கோதுமை ரவை, தேங்காய் துருவல் சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.
* இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!
* இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று ரவையில் இனிப்பு பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1/4 படி
அச்சு வெல்லம் - 12
நெய் - 5 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 12
காய்ந்த திராட்சை - 12
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை
செய்முறை:
ரவைவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிய பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும்.
இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும்.
ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவை இனிப்பு பொங்கல் தயார்.
- ரவையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சூப்பரான ரவா கார பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவா - 1 கப்
வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்
பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
நெய் - 3 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்தவுடன், அதில் பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு பொட்டுக் கொள்ளவும்.
* அடுத்து இதில் நன்கு வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். கொதி வந்ததும் இளந்தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.
* அடுத்து அதில் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலக்கவும்.
* இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வாசம் வரும் வரை தாளித்து பொங்கலில் கலந்து இறக்கினால் ரவா கார பொங்கல் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சர்க்கரை நோயாளிகளும் இந்த பாயாசத்தை குடிக்கலாம்.
- இதை ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை - 1 கப்
ஜவ்வரிசி - அரை கப்
தண்ணீர் - 3 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 2 கப்
தேங்காய் பால் - 3 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - விருப்பத்திற்கேற்ப
நெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை
ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லம் அல்லது கருப்பட்டையை போட்டு அடுப்பில் வைத்து, 10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.
இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.
- ரவையில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று எளியமுறையில் ரவா லட்டு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - ½ கிலோ
சர்க்கரை - ½ கிலோ
நெய் - 6 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 50 கிராம்
தேங்காய் - 1
ஏலக்காய் - 12
பால் - 250 மில்லி லிட்டர்
செய்முறை:
முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும்.
அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும்.
கைவிடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்
பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும்.
கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.
சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம்.
சுவையான ரவா லட்டு தயார்.
- பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.
- இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா விதமான பழங்களையும் உபயோகிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பழத்துண்டுகள் - 1 1/2 கப்
நெய் - விருப்பத்திற்கேற்ப
முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை - விருப்பத்திற்கேற்ப
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் பழத்துண்டுகளைப் போட்டு, சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மேலும் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, ரவையை கொட்டி ஓரிரு நிமிடங்கள் வறுத்து, இறக்கி வைக்கவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையை கொட்டிக் கிளறவும்.
ரவா வெந்தவுடன், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
அடுத்து அதில் ஏலக்காய்த் தூள், கேசரி பவுடரை சேர்த்து கிளறவும்.
பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், சிறிது நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
கேசரி சற்று கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான பழக்கேசரி ரெடி.
இனிப்பு சற்று கூடுதலாக வேண்டுமெனில், மேலும் அரைக்கப் சர்க்கரை சேர்க்கலாம்.
- ரவையில் உப்புமா, கிச்சடி செய்து இருப்பீங்க.
- இன்று ரவையில் சூப்பரான வடை செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
கறிவேப்பிலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பௌலில் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் உப்பு சேர்த்து கலந்து, பின் 1 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, மெதுவாக தண்ணீர் ஊற்றி, வடை பதத்திற்கு கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஏனெனில் ரவை ஊறும் போது இன்றும் திக்கான பதத்தில் வரும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
பின் பிசைந்து வைத்துள்ள கலவையை எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான ரவா வடை ரெடி!
- தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை உணவு இட்லி.
- இன்று ரவா இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவா - 1 கப்
நெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 1/4 கப்
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேவையான அளவு - உப்பு
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
முந்திரிப் பருப்பு - 10
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் தயிர், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
20 நிமிடங்கள் கழித்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.
இப்போது சுவையான ரவா இட்லி தயார்.
- இது சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவு.
- சம்பா கோதுமை ரவையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை ரவை - 1 கப்
பாசி பருப்பு - அரை கப்
உப்பு - சுவைக்கு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 3 கப்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரி - 6
செய்முறை :
இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.
அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள்.
பின் 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள்.
விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள்.
தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள்.
அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.
- வித்தியாசமான உணவுகளை செய்து தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- இன்று ரவையை வைத்து சுவையான மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 150 கிராம்
தயிர் - அரை கப்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
அதன்பின் மசித்து வைத்துள்ள உப்பு, உருளைக்கிழங்கை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும்.
இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் செய்து வைத்த மசாலாவை தோசையின் நடுவில் வைத்து உருட்டி சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும்.
இப்பொழுது சூப்பரான ரவா மசாலா தோசை ரெடி.