என் மலர்
நீங்கள் தேடியது "டிஎன்பிஎல் கிரிக்கெட்"
- முதலில் விளையாடிய நெல்லை அணி 209 ரன்கள் அடித்தது.
- நெல்லை வீரர் சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார்.
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய பேட்டிங் செய்த நெல்லை அணியில் தொடக்க வீரர் நிரஞ்சன் 47 ரன்கள் அடித்தார். பாபா அபரஞ்சித் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவும், கேப்டன் பாபா இந்திரஜித்தும், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.42 பந்துகளை சந்தித்த சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார்.
இந்திரஜித் 34 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர். நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது. இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர் பாலச்சந்தர் அனிருத் ஒரு ரன்னுடன் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரர் அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். கேப்டன் சதுர்வேதி 27 ரன்னுக்கு அவுட்டானார்.
ஜெகதீசன் கவுசிக் 21 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்தது. இதையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. இது நெல்லை அணி பெறும் நான்காவது வெற்றியாகும்.
- டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- சஞ்சய் யாதவ் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி முதலில் களம் இறங்கிய பேட்டிங் செய்த நெல்லை அணியில் தொடக்க வீரர் நிரஞ்சன் 47 ரன்கள் அடித்தார். பாபா அபரஞ்சித் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவும், கேப்டன் பாபா இந்திரஜித்தும், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.42 பந்துகளை சந்தித்த சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார். இந்திரஜித் 34 ரன்கள் எடுத்தார்.
இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர். நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது. இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மதுரை பாந்தர்ஸ் அணி விளையாட உள்ளது.
- நேற்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது.
- இரு அணிகளும் இதுவரை தோற்கவில்லை. இதனால் எந்த அணிக்கு முதல் தோல்வி கிடைக்க போகிறது என்று எதிர் பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல்:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந்தேதி நெல்லையில் தொடங்கியது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் , மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
நேற்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது. திண்டுக்கல் அணி 2-வது வெற்றியை பெற்றது. திருப்பூர் அணி முதல் தோல்வியை தழுவியது.
திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 10-வது ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை தோற்கவில்லை. இதனால் எந்த அணிக்கு முதல் தோல்வி கிடைக்க போகிறது என்று எதிர் பார்க்கப்படுகிறது. மதுரை அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ்) வெற்றி பெற்று இருந்தது. ஹாட்ரிக் வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது.
நெல்லை அணி தான் மோதிய 3 போட்டிகளிலும (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ்) வெற்றி பெற்றது. 4-வது வெற்றி ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.
- முதலில் விளையாடிய திருப்பூர் அணி 145 ரன்கள் எடுத்தது.
- திண்டுக்கல் வீரர் விஷால் வைத்யா 84 ரன்கள் குவித்தார்.
நத்தம்:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று முடிந்தன. அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய திருப்பூர் அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ஸ்ரீகாந்த் அனிருத்தா 8 ரன் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சித்தார்த் டக் அவுட்டானார். அதிகபட்சமாக அந்த அணி வீரர் அரவிந்த் 32 ரன்கள் அடித்தார்.
மான் பாப்னா 21 ரன்களும், துஷார் ரஹேஜா 20 ரன்னும் அடித்தனர். முகமது 27 ரன்களும், அஸ்வின் 20 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
திண்டுக்கல் அணியில் சிலம்பரசன் 3 விக்கெட்களும், ஹரி நிசாந்த் 2 விக்கெட்களும்,ரங்கராஜ் சுதேஷ் 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.
இதையடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி விளையாடியது. அதிரடி காட்டிய அந்த அணியின் தொடக்க வீரர் விஷால் வைத்யா 57 பந்துகளில் 84 ரன்கள் குவித்ததுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.
கேப்டன் ஹரி நிஷாந்த் 25 ரன்கள் அடித்தார். மணி பாரதி 38 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதையடுத்து திண்டுக்கல் அணி 18.1 ஓவர் முடிவில் 148 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
- முதலில் விளையாடிய திருப்பூர் அணியில் அரவிந்த் 32 ரன்கள் அடித்தார்.
- திண்டுக்கல் வீரர் சிலம்பரசன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
நத்தம்:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று முடிந்தன.அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர் கொண்டுள்ளது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய திருப்பூர் அணி தொடக்க வீரரும் கேப்டனுமான ஸ்ரீகாந்த் அனிருத்தா 8 ரன் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சித்தார்த் டக் அவுட்டானார்.
அதிகபட்சமாக அந்த அணி வீரர் அரவிந்த் 32 ரன்கள் அடித்தார். மான் பாப்னா 21 ரன்களும், துஷார் ரஹேஜா 20 ரன்னும் அடித்தனர். முகமது 27 ரன்களும், அஸ்வின் 20 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
திண்டுக்கல் அணியில் சிலம்பரசன் 3 விக்கெட்களும், ஹரி நிசாந்த் 2 விக்கெட்களும்,ரங்கராஜ் சுதேஷ் 2 விக்கெட்களும் கைப்பற்றினர். இதையடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி விளையாட உள்ளது.
- அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.
- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும்.
அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது. 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது.
அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. மூன்று நாள் இடைவெளிக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.
- மதுரை அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
திண்டுக்கல்:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி தொடங்கியது. நெல்லையில் 6 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், எஞ்சிய ஆட்டங்கள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
2 நாள் இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.
பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நெல்லை அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் தோற்கடித்தது. அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
திண்டுக்கல் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது போட்டியில் 5 விக்கெட்டில் கோவை கிங்சை வீழ்த்தியது. 2-வது வெற்றி வேட்கையில் அந்த அணி இருக்கிறது.
இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மதுரை அணி முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கோவை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் தோற்றது. மதுரை அணி 2-வது வெற்றிக்காகவும், கோவை முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.
- டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன்.
- டோனிபோல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.
நெல்லை:
டி.என்.பி.எல். போட்டியில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய திருச்சி வாரியர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது.
முரளி விஜய் 16 பந்தில் 34 ரன்னும் (6 பவுண்டரி ,1 சிக்சர் ), அமித் சாத்விக் 21 பந்தில் 26 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டும், மோகன் பிரசாத், எம். முகமது, லட்சுமி சத்யநாராயணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துஷ்கர் ரகேஜா 26 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்பிரமணியன் ஆனந்த் 26 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எம். முகமது 15 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சரவணகுமார் 3 விக்கெட்டும், மதிவாணன் 2 விக்கெட்டும், பொய்யாமொழி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
திருப்பூர் தமிழன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 14.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.
7-வது விக்கெட்டான துஷ்கர் ரகேஜா-எம்.முகமது ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தது. இந்த வெற்றி குறித்து திருப்பூர் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அணிருதா கூறியதாவது:-
டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். அவரைப்போல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற எஸ்.முகமது கூறும்போது, "எந்த சூழலிலும் நான் நெருக்கடியை உணரவில்லை இறுதிவரை களத்தில் நின்றால் வெற்றி பெற முடியும் என்று உறுதியோடு நம்பினோம். அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்தது" என்றார்.
திருச்சி அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ராஹில் ஷா கூறும்போது, "எங்களது பேட்டிங்கில் இன்னும் 15-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அதே நேரத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றிக்கான தருணத்தை நாங்கள் தவறவிட்டு விட்டோம்" என்றார்.
நெல்லையில் டி.என்.பி.எல். ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும்.
30-ந் தேதியில் இருந்து திண்டுக்கல்லில் போட்டிகள் நடக்கிறது. அன்று நடைபெறும் ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் (மாலை 3.15), மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன. * * * திருச்சி அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் தன்னை அவுட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் எம்.முகமதுவை பாராட்டினார்.
- தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.
- திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.
நெல்லை:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது. 2-வது போட்டியில் திருச்சி வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.
3-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் 4 விக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் , 4-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டில் சேலத்தையும் தோற்கடித் தன.
நேற்று நடந்த 5-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித் தது. பின்னர் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது.
இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ரஹில்ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ்-அணிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திருச்சி அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.
- நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது.
- அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்தார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணியில் கவின் 48 ரன்களும், டேரில் பெராரியா 60 ரன்களும் விளாச, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.
துவக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் சூரியபிரகாஷ்- பாபா அபராஜித் இருவரும் பொறுப்புடன் விளையாடி, ஸ்கோரை உயர்த்தினர். சூரிய பிரகாஷ் 35 ரன்களும், அபராஜித் 32 ரன்களும் அடித்தனர். பாபா இந்திரஜித் 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் அஜிதேஷ் அதிரடியாக ஆடி பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். ஜிதேந்திர குமார் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் சேர்த்தார்.
இதனால் நெல்லை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் நெல்லை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார்.
- நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்கள் ஜமால் (11), கோபிநாத் (10) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவின் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார். அதன்பின், டேரில் பெராரியோ, நெல்லை பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். அவர் 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார்.
இதனால் சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. பெராரியோ 60 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆர்யா யோகன் மேனன், சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.