என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.
    • பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம், கருட பகவான் மனித பிறப்பு மற்றும் இறப்புகளைப் பற்றி கேட்டறிந்த விஷயங்கள் அடங்கிய தொகுப்பே 'கருடபுராணம்' என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில தகவல்கள் உங்களுக்காக...


    * அன்னதானம் செய்தால், விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

    * கோ தானம் செய்தால் பசுக்களின் உலகமான கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

    * கன்றை ஈனும் சமயத்தில், பசுவை கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

    * குடை தானம் செய்தவர், 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

    * தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை போன்றவற்றில் எதை தானம் செய்தாலும், சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

    * வஸ்திர தானம் கொடுத்தவருக்கு, வாயு லோகத்தில் வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

    * வஸ்திரத்தை கடவுளுக்கு சாற்றினால், எந்த கடவுளுக்கு சாற்றுகிறார்களோ, அவர்களின் உலகத்தில் வாழுவர்.

    * ரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர்கள், அக்னி லோகத்தில் ஆனந்தமாக இருப்பார்கள்.

    * விஷ்ணு - சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர்கள், சொர்க்கத்தில் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள்.

    * குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு, 14 இந்திரர்களின் காலம் வரை வருண லோகத்தில் வாழும் வாய்ப்பு அமையும்.

    * ஆலயங்களில் நந்தவனங்களை அமைத்துக் கொடுப்பவர், வாயு லோகத்தில் ஒரு மன்வந்த்ர காலம் வாழ்வர்.

    * தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் செய்தவர், மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

    * பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாய் அமைவதோடு, அவருக்கு மீண்டும் பிறவிகள் இருக்காது.

    * நற்செயலை விரும்பி செய்கிறவர்கள், சூரியலோகம் செல்வார்கள்.

    * தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு, சத்தியலோகத்தில் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.

    * ஒரு பெண்ணை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்தவருக்கு, 14 இந்திரனின் ஆயுட்காலம் வரை அமராவதியில் இன்பமாய் இருக்கும் வாய்ப்பு அமையும்.

    * நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும், ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

    * பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    * தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர், 10 ஆயிரம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பர்.

    * சுவையான பழங்களை தானம் கொடுத்தவருக்கு, ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

    * ஒரு சொம்பு நல்ல நீரை தானம் செய்தவர்களுக்கு, கயிலாய வாசம் கிடைக்கும்.

    * கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.

    * பறவைகளை காப்பாற்றியவர்கள், கருடனின் ஆசிபெற்று வைகுண்டம் சென்றடைவர்.

    * விலங்குகளை காப்பாற்றியவர்கள், நந்திதேவரின் ஆசி பெற்று சிவலோகம் அடைவர்.

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 26 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : அஷ்டமி இரவு 7.22 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : கேட்டை இரவு 6.07 மணி வரை. பிறகு மூலம்.

    யோகம் : சித்த/மரண யோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை

    இன்று ஜேஷ்டாஷ்டமி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். விருதுநகர் ஸ்ரீசுவாமி ஸ்ரீஅம்பாள் விருஷபாருட தரிசனம். மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் வளையல் விற்றருளிய காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசி பலன்

    மேஷம் - நம்பிக்கை

    ரிஷபம் - பரிசு

    மிதுனம் - உதவி

    கடகம் - புகழ்

    சிம்மம் - நலம்

    கன்னி - நன்மை

    துலாம் - லாபம்

    விருச்சிகம் - யோகம்

    தனுசு - கீர்த்தி

    மகரம் - வெற்றி

    கும்பம் - இன்பம்

    மீனம் - சலனம்

    • நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன்.
    • அவர்களிடம் சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.

    நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன்.

    அவர்களிடம் சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.

    பூலோகம் வந்த இருவரும் வேலையை மறந்து நந்தவன நிழலில் படுத்து தூங்கி விட்டனர்.

    நந்திதேவருக்கு கோபம் வந்தது.

    ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.

    இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

    பூனையை ஒரு வேடன் துரத்தினான்.

    பயந்து ஓடிய பூனை அருகிலிருந்த சிவன் கோவிலுக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிக் கொண்டது. வேடனின் அம்பு சிவலிங்கம் மீது பட்டு ரத்தம் கொட்டியது.

    பூனை பயந்து தீர்த்த குளத்துக்கு ஓடியது. சிவனை காயப்படுத்தி விட்டோமே என்று கவலை அடைந்த வேடனும் தீர்த்தத்தில் நீராடி சிவனிடம் மன்னிப்பு கேட்க வந்தான்.

    ஒரே சமயத்தில் வேடன் ஒரு பக்கம், பூனை ஒரு பக்கம் குளத்தில் மூழ்கி எழுந்திருக்க... இருவரும் மீண்டும் மகாகாந்தன், காந்தன் ஆக மாறினார்கள்.

    பூ, பழங்களை படைத்து ஈசனை வணங்கினார்கள்.

    இது நடந்தது ஒரு சிவராத்திரி தினத்திலாகும். எனவே சிவராத்திரி கதைகளில் இதுவும் இடம் பெற்றுள்ளது.

    • திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
    • இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம்.

    திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

    இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம்.

    சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்த வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தைப் பறித்துப்போட இறைவன் காலையில் தோன்றி அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

    சுவாமி மலையில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

    வேடன் ஒருவன் சிவலோகம் செல்ல அதைத் தடுத்தான் எமன்.

    தம் அடியாரின் உயிரைக் கவர வந்ததை அறிந்து சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் கையில் கோல் கொண்டு விரட்டினாராம்.

    எமனை அதன் பின்னர் வேடன் செய்த சிவபூஜையின் மகிமையும் சிவராத்திரி மகிமையும் அவனுக்குச் சொல்லப்பட்டதாம்.

    • சிவபெருமான் பார்வதி தேவிக்கு ‘ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறிய இடம் இது என்பார்கள்.
    • இதை பிரணவ வியாக்கிரபுரம் என்கின்றனர். சிவ மகா புராணத்தில் கூறப்பட்டுள்ள கதை போல ஒரு கதை இங்கும் வழக்கத்தில் உள்ளது.

    சிதம்பரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் ஓமாம்புலியூர் உள்ளது.

    இக்கோவில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.

    புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது.

    சிவபெருமான் பார்வதி தேவிக்கு 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறிய இடம் இது என்பார்கள்.

    இதை பிரணவ வியாக்கிரபுரம் என்கின்றனர். சிவ மகா புராணத்தில் கூறப்பட்டுள்ள கதை போல ஒரு கதை இங்கும் வழக்கத்தில் உள்ளது.

    மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் ' என்றும்; இறைவன் பெயர் 'வடதளி உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

    • இரவு முழுவதும் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டும் 108 முறை பிரகார வலம் வந்தும் பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள் பக்தர்கள்.
    • வாழ்வில் ஒரேயரு முறையேனும் இக்கோவிலை மகா சிவராத்திரி நாளில் தரிசிக்கப் பெரும் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

    பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது இம்மையில் நன்மை தருவார் கோவில்.

    சுவாமி- சொக்கநாதர், அம்பாள் ஸ்ரீமீனாட்சியம்மை.

    அதிகாலை சூரியோதயம் துவங்குகிற நேரம் முதல் மறுநாள் காலை சூரியோதயம் வரை சிவராத்திரி விரத காலம் அனுஷ்டிப்பார்கள்.

    சிறப்பு அர்ச்சனையும் அபிஷேகங்களும் நடைபெறும்.

    இரவு முழுவதும் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டும் 108 முறை பிரகார வலம் வந்தும் பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள் பக்தர்கள்.

    வாழ்வில் ஒரேயரு முறையேனும் இக்கோவிலை மகா சிவராத்திரி நாளில் தரிசிக்கப் பெரும் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

    • தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமானது திருக்கழுக்குன்றம்.
    • சதுர் யுகங்களாக நிலைத்திருக்கும் இந்தத் தலத்தில் ஈசன் வேதகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

    செங்கல்பட்டு அருகில் உள்ள தலம்.

    இத்தலத்தை ருத்திரகோடி என்பார்கள்.

    தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமானது திருக்கழுக்குன்றம்.

    சதுர் யுகங்களாக நிலைத்திருக்கும் இந்தத் தலத்தில் ஈசன் வேதகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

    நால்வர் பெருமக்களும் பாடிய இந்த அற்புதத் தலத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் இங்கே ஈசனை வழிபட்டு மலைகளாக மாறி நிற்பதாக ஐதிகம்

    கோடி ருத்தரர்கள் சிவராத்திரி காலத்தில் பூஜை செய்த இடமாததால் இந்தக் கோவிலை சிவராத்திரி நாளில் வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

    • அப்போது சிவாம்சமாக பதினொரு கோடி ருத் திரர்கள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.
    • அவர்கள் அமைத்து வழிபட்ட லிங்க மூர்த்தமே திருவிடை மருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி.

    கும்பகோணம் அருகில் உள்ள தலம்.

    ஒருமுறை உமையம்மை கயிலையை விட்டு நீங்க எங்கும் இருள்சூழ்ந்து உலகம் தவித்தது.

    அப்போது சிவாம்சமாக பதினொரு கோடி ருத் திரர்கள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.

    அவர்கள் அமைத்து வழிபட்ட லிங்க மூர்த்தமே திருவிடை மருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி.

    அவர்களின் பிரார்த்தனையை ஏற்று ஜோதி ஸ்வருபமாக வெளிப்பட்டாராம் ஈசன்.

    அவரின் ஒளியால் உலகத்து உயிர்கள் இன்புற்றன.

    இப்படி ருத்திரர்கள் அருள் பெற்றது சிவராத்திரி தினத்தில்தான்.

    சிவராத்திரியில் இங்கு ஈசனை தரிசிப்போர் ருத்ரபதம் பெறுவார்கள்.

    • சிவ மகாபுராணத்தில் கொல்லப்பட்டுள்ள வேடன் கதை நடந்த இடம் இது.
    • இங்கே நந்தி தேவர் மலை உருவில் இருக்கிறார்.

    ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் நந்தியால் என்ற இடத்துக்கு அருகில் உள்ள தலம் இது.

    சென்னையிலிருந்தும் திருப்பதியில் இருந்தும் பஸ் வசதி உண்டு.

    சிவ மகாபுராணத்தில் கொல்லப்பட்டுள்ள வேடன் கதை நடந்த இடம் இது.

    இங்கே நந்தி தேவர் மலை உருவில் இருக்கிறார்.

    இத்தலத்தை திருப்பருப் பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் குறிப்பிடுவார்கள்.

    இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.

    சிவராத்திரி நாளில் இங்குள்ள பாதாள கங்கை எனற தீர்த்தத்தில் நீராடி மல்லிகார்ஜுனரை வழிபடுவது புண்ணிய பலன்களைத் தரக் கூடியது.

    சிவராத்திரியை ஒட்டி இங்கு பிரம்மான்டமான திருவிழா நடை பெறுகிறது. சிவராத்திரி அன்று தேர்த் திருவிழாவைக் காண பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் திரளாகக் கூடவர்.

    • சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் லிங்கத்தில் இருந்து சிவன் வெளிப்பட்ட காலம் சம்ஹாரராக வந்து எமனை வதம் செய்தார்.
    • சிவராத்திரியன்று இங்கு வந்து வழிபட்டால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.

    எமனுக்கும் சிவராத்திரிக்கும் தொடர் புண்டு.

    சிவராத்திரி வேளையில்தான் சிவ பெருமானை வழிபடும் மார்க்கண்டேயனைப் பிடிக்க வந்த எமன் தண்டிக்கப்பட்டான்.

    சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் லிங்கத்தில் இருந்து சிவன் வெளிப்பட்ட காலம் சம்ஹாரராக வந்து எமனை வதம் செய்தார்.

    சிவராத்திரியன்று இங்கு வந்து வழிபட்டால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.

    • சிவராத்திரி நாளில் காளத்தி நாதர் பவனி வருவார்.
    • தேரோட்டம், திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை என பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    திருப்பதிக்கு அருகே உள்ள காளத்தி மலையில் ஒவ்வொரு பட்சத்தில் வரும் சதுர்த்தசி நாளும் நித்திய சிவராத்திரியாகக் கொண்டாடப்படுவது இக்கோவிலில் மட்டும் வழக்கத்தில் உள்ளது.

    பிராந்திய பாரம்பரியத்தின் படி, சிவன் அவரை தடுத்து அவருக்கு மோட்சம் வழங்குவதற்கு முன், கண்ணப்பன் லிங்கத்திலிருந்து வழியும் இரத்தத்தை மறைக்க தனது இரு கண்களையும் வழங்க தயாராக இருந்த தலம் இது என்று கூறப்படுகிறது .

    சிவராத்திரி நாளில் காளத்தி நாதர் பவனி வருவார்.

    தேரோட்டம், திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை என பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    • ஆதி ஜோதி வடிவில் காட்சி கொடுத்ததைத்தான் கார்த்திகை தீபம் என்ற குறியீட்டால் விளக்குகிறார்.
    • மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.

    பிரம்மனும் விஷ்ணுவும் அடிமுடி தேட அழல் மலையாய் நின்ற பெருமான் உலகம் உய்யும் பொருட்டு கல் மலையாகக் காட்சிக்கொடுத்த இடமே திருவண்ணாமலை.

    அவரே அண்ணாமலையார்.

    ஆதி ஜோதி வடிவில் காட்சி கொடுத்ததைத்தான் கார்த்திகை தீபம் என்ற குறியீட்டால் விளக்குகிறார்.

    மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.

    இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மகாசிவராத்திரி நாளில் லிங்கோத் பவ காலம் என்று சொல்லப்படும் காலத்தில் சிவன் ஜோதி வடிவில் காட்சி கொடுத்தார் என்பார்.

    ×