என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-திருக்கழுக்குன்றம்
- தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமானது திருக்கழுக்குன்றம்.
- சதுர் யுகங்களாக நிலைத்திருக்கும் இந்தத் தலத்தில் ஈசன் வேதகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
செங்கல்பட்டு அருகில் உள்ள தலம்.
இத்தலத்தை ருத்திரகோடி என்பார்கள்.
தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமானது திருக்கழுக்குன்றம்.
சதுர் யுகங்களாக நிலைத்திருக்கும் இந்தத் தலத்தில் ஈசன் வேதகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
நால்வர் பெருமக்களும் பாடிய இந்த அற்புதத் தலத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் இங்கே ஈசனை வழிபட்டு மலைகளாக மாறி நிற்பதாக ஐதிகம்
கோடி ருத்தரர்கள் சிவராத்திரி காலத்தில் பூஜை செய்த இடமாததால் இந்தக் கோவிலை சிவராத்திரி நாளில் வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
Next Story






