என் மலர்
பிரிட்டன்
- இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார்.
- இந்தியா சார்பில் பாண்ட்யா 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இதனால் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்
.அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜேசன் ராய் 41 ரன்களும் அடித்தார். பேட்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். பென் ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார். மொயின் அலி (34 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (27 ரன்கள்), டேவிட் வில்லி (18 ரன்கள்), அடித்தனர். கிரேக் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது
- விராட் கோலி கடைசியாக நவம்பர் 2109-ல் தான் சதம் அடித்துள்ளார்.
- இங்கிலாந்து தொடரிலும் விராட் கோலி சரிவர விளையாடதால் அவர்மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபகாலமாக போட்டிகளில் சரிவர விளையாடுவதில்லை என்று விமர்சனங்கள் எழுத்து வருகிறது. கோலி கடைசியாக நவம்பர் 2109-ல் தான் சதம் அடித்துள்ளார். அதன் பின்னர் அவர் சதம் அடிக்கவில்லை.. இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விராட் கோலி சரிவர விளையாடதால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.
விராட் கோலிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விராட் கோலி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறவையின் இரண்டு சிறகுகள் உள்ளது, அதன் அருகில் கோலி அமர்ந்திருக்கிறார்.
சிறகுகளுக்கு மேல், ஒருவேளை நான் கீழே விழுந்தால்? என்ற கேள்வி இருக்க, அதற்கு கீழே, ஒருவேளை நீ மேலும் மேலும் பறக்கலாம் அல்லவா? என தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் வாசகங்கள் உள்ளன.
- இங்கிலாந்தின் டோப்லே 6 விக்கெட் வீழ்த்தினார்.
- இந்தியா சார்பில் ஹர்திக், ஜடேஜா ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.
லார்ட்ஸ்:
இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொயீன் அலி 47 ரன், டேவிட் வில்லே 41 ரன், ஜேனி பேர்ஸ்டோவ் 38 ரன் எடுத்தனர்.
இந்தியா சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா, டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தவான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் டக் அவுட்டானார். விராட் கோலி 16 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 27 ரன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா தலா 29 ரன், ஷமி 23 ரன் எடுத்தனர்.
இறுதியில், இந்தியா 146 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சார்பில் டோப்லே 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் தற்போது 1-1என சமனில் உள்ளது. இறுதி மற்றும் 3வது ஒருநாள் போட்டி 17ம் தேதி நடைபெற உள்ளது.
- நேற்று 2-ம் சுற்று தேர்தல் நடைபெற்றது.
- இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவா்மன் 32 வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில், ரிஷி சுனக் உள்பட 6 வேட்பாளர்கள் நேற்று 2-வது சுற்று வாக்குப்பதிவை எதிர்கொண்டனர். இதில் ரிஷி சுனக் 101 வாக்குளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் 27 வாக்குகளை மட்டுமே பெற்றதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 3-வது சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.
- இன்று 2-ஆம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.
- 2-ஆம் சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.
லண்டன்:
நெருக்கடி காரணமாக இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் அறிவித்தனர்.
கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், களத்தில் 8 பேர் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வர்த்தக மந்திரி பென்னி மொர்டான்ட் 67 வாக்குகள், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் 50 வாக்குகள், முன்னாள் மந்திரி கெமி படனாக் 40 வாக்குகள், டாம் டுகெந்தாட் 38 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். மற்றொரு இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவா்மன் 32 வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்.
2ம் சுற்றுக்கு 30 வாக்குகளை பெற வேண்டிய நிலையில், நாதிம் சகாவி, ஜெரிமி ஹண்ட் ஆகியோரும் முறையே 25, 18 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தனர். இன்று 2-ம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்த சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது. கடைசி இருவா் தோந்தெடுக்கப்படும் வரை பலசுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறும். புதிய பிரதமராக தோந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.
- புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் உள்பட 8 பேர் உள்ளனர்.
- எம்.பி.க்கள் பலர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
லண்டன்:
பிரட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சி எம்.பி.க்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா விதி முறையை மீறி மது விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சையில் சிக்கிய அவர், அரசாங்கத்தை திறமையுடன் நடத்தவில்லை என்று நிதி மந்திரியாக இருந்த ரிஷி சுனக் உள்ளிட்ட மூத்த மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
நெருக்கடி அதிகமானதால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது.
புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் அறிவித்தனர். கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், களத்தில் 8 பேர் உள்ளனர்.
இங்கிலாந்து அரசமைப்பு சட்டப்படி ஆளும் கட்சி தலைவர்தான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க முடியும். அதன்படி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக பதவியேற்க உள்ளார். தலைவர் தேர்தல் இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. அக்கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களிப்பாளர்கள். முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றுதல் வாக்கெடுப்பில் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டே வந்து இறுதியில் 2 பேர் மட்டும் களத்தில் இருப்பார்கள்.
இறுதிச் சுற்று போட்டியிலும் இருவரில் ஒருவரை கட்சியின் 2 லட்சம் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அவரே கட்சி தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார். முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
தற்போது களத்தில் உள்ள 8 பேரில் ரிஷி சுனக்குக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு எம்.பி.க்களில் அதிக ஆதரவு இருப்பதால் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
போட்டியில் இருந்து விலகிய கிராண்ட் ஷேப்ஸ், தனது ஆதரவை ரிஷி சுனக்குக்கு தெரிவித்துள்ளார். இதே போல் எம்.பி.க்கள் பலர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய பிரதமரின் பெயர் வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அறி விக்கப்படும்.
- கட்சி தலைவர் பதவியில் இருந்தும் போரிஸ் ஜான்சன் விலகினார்.
- முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் எந்தவொரு வேட்பாளரும் வெளியேற்றப்படுவார்.
லண்டன் :
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்தது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்த 30 பேர் பதவி விலகினர்.
மொத்தம் 58 மந்திரிகள் அரசில் இருந்து வெளியேறினர். இதனால், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தனது நெருங்கிய சகாவான கஜானா தலைவர் நதீம் ஜகாவி, நாட்டின் நலனை முன்னிட்டு பதவி விலகும்படி கூறியதன் அடிப்படையில் ஜான்சன், கடந்த வாரம் வியாழக்கிழமை பதவி விலகினார்.
எனினும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் ஜான்சன் இருந்த நிலையில், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன.
போரிஸ் ஜான்சன் பதவி விலகலை தொடர்ந்து புதிய பிரதமருக்கான பதவிக்கு பல்வேறு நபர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் கடந்த வெள்ளி கிழமை புதிய பிரதமர் போட்டிக்கான தனது அறிவிப்பினை வெளியிட்டடார்.
இதேபோன்று, அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பாகிஸ்தான் வம்சாவளி சுகாதார மந்திரி சஜித் ஜாவித், போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் வெளியுறவு மந்திரி ஜெரிமி ஹண்ட் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். மேலும் அட்டார்னி ஜெனரல் சுயல்லா பிரேவர்மென், ஈராக் வம்சாவளி நதீம் ஜகாவி, நைஜீரிய வம்சாவளி கெமி பெடனாக், டாம் டுகெந்தாட் ஆகியோரும் வேட்பாளர் ஆனார்கள்.
இந்த போட்டியில் வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்டும் இணைந்து உள்ளார். இந்த சூழலில், இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் இறங்கியுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இதற்காக, இந்தோனேசியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற அவர், உடனடியாக அதனை முடித்து கொண்டு லண்டனுக்கு திரும்பினார். எம்.பி. ரகுமான் சிஸ்டி போட்டியில் உள்ள சூழலில், லிஸ்சின் அறிவிப்பு ஆகியவற்றால், இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
58 வயது நிறைந்த ஜான்சன் 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் நீடித்து வந்த நிலையில், கட்சிக்கு நன்கொடை அளிப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடாவடித்தனத்தில் ஈடுபட்ட மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனது ஆதரவாளர்களை பாதுகாத்து வந்துள்ளார். நாடாளுமன்றத்தினை தவறாக வழிநடத்தியதுடன், பொதுமக்களுக்கு நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி நடந்து கொண்டார் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுப்பப்பட்டன. எனினும், வருகிற அக்டோபர் வரை அவர் பதவியில் நீடிக்க கூடும் என கூறப்படுகிறது. அதன்பின்னரே கன்சர்வேடிவ் கட்சியின் வருடாந்திர கூட்டம் நடத்தப்பட்டு ஜான்சனுக்கு பதிலாக மற்றொரு நபரை தேர்வு செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் மற்றும் வெளியுறவு மந்திரி ரகுமான் சிஸ்டி ஆகிய 3 பேர் வாபஸ் பெற்று விட்டனர். இதனால், இந்த தேர்தலில் இறுதியாக 8 பேர் போட்டியில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் 20 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் முதல் சுற்று வாக்கெடுப்பில் போட்டியிடுவார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் முன்பதிவு நிறைவடைந்து விட்டது. முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் எந்தவொரு வேட்பாளரும் வெளியேற்றப்படுவார்.
புதிய கன்சர்வேடிக் தலைவர் 2 நிலையிலான தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுவார். இதற்காக 358 உறுப்பினர்கள், அடுத்தடுத்து நடத்தப்படும் வெளியேற்றுதல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டே வருவார்கள். இறுதியில் 2 வேட்பாளர்கள் என்ற நிலைக்கு கொண்டு வரப்படும். இந்த தேர்தலில் போட்டியிடும் பலரும், கார்ப்பரேசன் வரி, வருமான வரி உள்ளிட்ட வரிகளை குறைப்போம் என உறுதி கொடுத்து உள்ளனர். இங்கிலாந்தில் விரி விதிப்பு மக்களுக்கு நெருக்கடியாக உள்ள சூழலில் அதனை வேட்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.
- முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓவல்:
இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார்.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும்எடுத்தனர். முன்னணி வீரர்களான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆடினர்.
தவான் நிதானமாக ஆட ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினார். அரை சதம் கடந்த அவர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா76 ரன்னும், ஷிகர் தவான் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர்.
தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும், பிரைடன் கார்சே 15 ரன்னும், மொயீன் அலி 14 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதல் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
- டி20 தொடரை வென்றதுபோல் ஒரு நாள் போட்டியிலும் வெல்ல இந்திய அணி முயற்சிக்கும்.
ஓவல்:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்குகிறது.
இரு அணி வீரர்கள் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், முகமது சமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோ ரூட், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டோன், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொய்ன் அலி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, டாப்லே.
- இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
- இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.
லண்டன்:
ஆளுங்கட்சியில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தான் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் கட்சி தலைமைக்கு கடும் போட்டி வலுத்து வருகிறது.
இதில் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக இருந்தவரும், இந்திய வம்சாவளி எம்.பி.யுமான ரிஷி சுனக், இந்திய வம்சாவளியை சேர்ந்த சூவெல்லா பிரேவர்மன், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாவித் ஜாவித், ஈராக் வம்சாவளியை சேர்ந்த நாதிம் சாகவி உள்பட 10 பேர் போட்டியில் உள்ளனர்.
இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.
ரிஷி சுனக் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாம் அனைவரும் இணைந்து நம்பிக்கையை மீட்டெடுப்போம். பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைப்போம். நாட்டை ஒற்றுமைப்படுத்துவோம். இந்த தருணத்தில் சரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இந்த வீடியோ 3 நிமிடங்கள் வரை ஓடுகிறது. அதில் ரிஷி சுனக் தனது பெற்றோர், குடும்ப பாரம்பரியம் பற்றி கூறி உள்ளார். அதோடு தனது பெற்றோர் எப்படி போராடினார்கள்? அவர்களுக்கு பிரிட்டன் எப்படி சிறந்த எதிர்காலத்தை அளித்தது என்பது பற்றியும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா காலத்தில் தான் மேற்கொண்ட பணிகள் பற்றியும் ரிஷி சுனக் பேசி உள்ளார்.
தற்போதைய தகவல்படி ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் மொத்தம் உள்ள 358 எம்.பி.க்களில் 8 சதவீதம் பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுதவிர பென்னி மார்டன்டுக்கு 6 சதவீத ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார மற்றும் சமூக நலக்குழு தலைவர் ஜெரிமி ஹன்டுக்கு 6 சதவீத ஆதரவும் உள்ளது. அதிக எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதால் ரிஷி சுனக் பிரதமராக தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.






