என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • 1998-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டேவிட் டிரிம்பிள் வழங்கப்பட்டது.
    • அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என போற்றப்படுபவர்.

    லண்டன்:

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல் மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார் (77). அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளனர் என டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

    டேவிட் டிரிம்பிளின் முயற்சியால் 1998-ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும், அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார்.

    பெல்பாஸ்ட் பகுதிகளில் 30 ஆண்டாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3,600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்த டேவிட் டிரிம்பிள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு 1998-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
    • சீனா இங்கிலாந்து தொழில்நுட்பத்தைத் திருடி வருகிறது.

    லண்டன் :

    இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று தலைநகர் லண்டனில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று ரிஷி சுனக் பேசியதாவது:-

    சீனாவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க உலகின் பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை என்னால் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.

    சீன இணைய அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திர நாடுகளின் புதிய சர்வதேச கூட்டணியை நான் உருவாக்குவேன்.

    சீனா இங்கிலாந்து தொழில்நுட்பத்தைத் திருடி வருகிறது. அதை தடுப்பதற்கு இங்கிலாந்தில் உள்ள அனைத்து சீன நிறுவனங்களையும் நான் மூடுவேன்.

    இவ்வாறு ரிஷி சுனக் பேசினார்.

    • காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்டு 8 வரை நடக்கிறது.
    • மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    லண்டனில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், லண்டனில் காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் மீது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் குற்றம்சாட்டியுள்ளார்.

    காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டார் என லவ்லினா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே என் பயிற்சி நின்றுவிட்டது. கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரின்போது இதே நிலை ஏற்பட்டதால் தொடர் மிக மோசமாக அமைந்தது. தன்னுடைய மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு விட்டார். இதையெல்லாம் கடந்து பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

    • முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.
    • தலா ஒரு வெற்றி மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடர் சம நிலையில் உள்ளது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்து. இந்நிலையில் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து 28.1 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிபட்சமாக அந்த அணி வீரர் லிவிங்ஸ்டோன் 38 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.

    பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்கள் முடிவில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஜானிமேன் மலான், வான்டெர் டஸன், மார்க்ராம் ஆகிய 3 பேரும் டக்-அவுட் ஆனார்கள்.

    இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டும், மொயீன் அலி, ரீஸ் டாப்லே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

    • இங்கிலாந்து பிரதமர் தேர்தல் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடக்கிறது.
    • போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர்.

    லண்டன் :

    இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 2-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் முதல் கட்ட தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் பல்வேறு சுற்றுகளாக வாக்களித்து போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர். அதன்படி இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகி உள்ளனர்.

    இவர்கள் இருவரில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். அதற்கான தேர்தல் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடக்கிறது.

    கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள். இடையே நடந்த முதல் கட்ட தேர்தலில் அனைத்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்ததால் அவர் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலவரத்தின்படி கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் டிரஸ்சுக்கே அதிக ஆதரவு உள்ளது.

    இதனிடையே பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கை விட 28 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனால் இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வருகிறது.
    • ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

    லண்டன் :

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து, பல சுற்றுகளாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    அந்த வகையில், 8 எம்.பி.கள் வேட்பாளர்களாக களமிறங்கிய நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. 3 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் கடைசியாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற பென்னி மார்டன்ட் போட்டியில் இருந்து வெளியேறினார்.

    ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஐந்தாவது சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 137 பேர் ஆதரவு பெற்றார். லிஸ் டிரஸ் 113 பேரின் ஆதரவு பெற்றார். வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 105 வாக்குகள் கிடைத்தன.

    இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

    புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதி சுற்றில் பழமைவாத கட்சியில் (கன்சர்வேடிவ்) மொத்தமுள்ள 2 லட்சம் உறுப்பினர்களும் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    செப்டம்பர் 5-ம் தேதி வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். வெற்றியாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வரும் சூழ்நிலையில் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான இறுதிச்சுற்றுக்கு ரிஷி சுனக் முன்னேறியுள்ளார்.
    • 120 ஓட்டுகள் பெறுபவரே கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் பொறுப்பேற்க முடியும்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.

    பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 இறுதி வேட்பாளரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் பல்வேறு கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடந்த 3 சுற்று தேர்தல்களில் 4 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, 4வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இந்த 2 சுற்று தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்து முன்னிலை வகித்தார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் 4-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதிலும் ரிஷி சுனக் முதலிடம் பிடித்தாா். மொத்தமுள்ள 358 கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களில் 115 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவருக்கு அடுத்தபடியாக வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 82 வாக்குகள் கிடைத்தன. வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ்சுக்கு 71 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளது.

    120 ஓட்டுகள் பெறுபவரே கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் பொறுப்பேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஐந்தாவது சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 137 பேர் ஆதரவு பெற்றார். லிஸ் டிரஸ் 113 பேரின் ஆதரவு பெற்றார். வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 105 வாக்குகள் கிடைத்தன.

    இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 333 ரன்களை குவித்தது.
    • தென் ஆப்பிரிக்காவின் நோர்ஜே 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 133 ரன்னில் அவுட்டானார். மார்கிரம் 77 ரன்னிலும், ஜேன்மன் மலான் 57 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து, 334 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ராய் 43 ரன்னில் வெளியேறினார்.

    பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

    முதலில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் அரை சதமடித்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து 46.5 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்டும், ஷம்சி, மார்கிரம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது வான் டெர் டுசனுக்கு அளிக்கப்பட்டது.

    • ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவு வெப்ப அலை வீசி வருகிறது.
    • இந்த வெப்ப அலையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    லண்டன்:

    ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் வெப்பம் தகிக்கிறது. லண்டனில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி அங்குள்ள மக்களை அதிர வைத்தது.

    இந்நிலையில், போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.

    தற்போது நிலவும் வெப்ப நிலை குறித்து வானியல் நிபுணரான டைய்லர் ராய்ஸ் கூறுகையில், 2003-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிக வெப்ப நிலையால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 30,000 பேர் வரை பலியாகினர். 1757-ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பா அதி தீவிர வெப்ப நிலையை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்தார்.

    • பிரதமர் பதவிக்கான மூன்றாம் சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது.
    • இதில் ரிஷி சுனக் 115 வாக்குகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.

    இதற்கிடையே, இரு சுற்றுகளாக நடந்த வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் இங்கிலாந்து முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், மூன்றாம் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. ரிஷி சுனக் உள்பட 6 பேர் களத்தில் இருந்தனர். இதில் ரிஷி சுனக் 115 வாக்குகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    வர்த்தக மந்திரி பென்னி மார்டன்ட் 88 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் 71 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார். கெமி படேனோக் 58 வாக்குகள் பெற்றுள்ளார்.

    புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

    • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.
    • ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா, இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

    இதற்கிடையே, 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரின் ஓல்டுடிராப்ட் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 45.5 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அத்துடன், ஆட்ட நாயகன் விருதையும் ரிஷப் பண்ட் கைப்பற்றினார்.

    ஒருநாள் போட்டியின் தொடர் நாயகன் விருதை ஹர்திக் பண்டியா கைப்பற்றினார்.

    • இந்திய வீரர் ரிஷப் பண்ட் 125 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
    • ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

    இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜேசன் ராய் 41 ரன்களும் அடித்தார்.

    பேட்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். பென் ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார். மொயின் அலி (34 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (27 ரன்கள்), டேவிட் வில்லி (18 ரன்கள்), அடித்தனர். கிரேக் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரரும் கேப்டனுமான ரோகித்சர்மா 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் ஒரு ரன்னுடன் வெளியேற, கோலி 17 ரன் அடித்தார். சூரியகுமார் யாதவ் 16 ரன்னுக்கு அவுட்டானார்.

    எனினும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டதுடன், இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியது. பாண்ட்யா 55 பந்துகளில் 71 ரன்களை குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பண்ட், சதம் அடித்தார்.

    42 வது ஓவரில் பண்ட் 21 ரன்களை குவித்தார். இந்திய அணி 42.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்த பண்ட் கடைசிவரை களத்தில் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 7 ரன் அடித்து களத்தில் நின்றார்.

    இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

    ×