என் மலர்
கனடா
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது.
- இதில் சின்னர், டி மினார் ஆகியோர் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயின் வீரர் போகினாவுடன் மோதினார். இதில் டி மினார் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தது.
- இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார்.
இதில் பெகுலா 6-2, 6-7 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
இதன்மூலம் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்வியாடெக் கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தது.
- முன்னணி வீராங்கனைகளான ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்சுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் தரவரிசையில் 3ம் இடத்திலுள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியாவின் டேரியா கசட்கினாவுடன் மோதினார்.
இதில் ரிபாகினா 5-7, 7-5, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் முன்னணி வீரர்களான மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தனர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் டி மினார் 7-6 (9-7), 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார். இதில் டாமி பால் 6-3, 4-6, 6-3 என்ற கணக்கில் கார்லோசை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடந்தது.
- இதில் நம்பர் 2 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் சாம்சொனோவாவுடன் மோதினார்.
இதில் சாம்சொனோவா 7-6 (7-2), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
முன்னணி வீராங்கனையான சபலென்கா இதில் தோற்றதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடைபெற்றது.
- இதில் முன்னணி வீரர்களான மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் முசேட்டியுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுயுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 3-6, 7-6 (7-2), 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று போட்டி நடந்தது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜேமி முர்ரே- நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியைச் சந்தித்தது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டி நடைபெறுகிறது.
- இதில் முன்னணி வீரர்களான சிட்சிபாஸ், ஸ்வெரேவ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 13-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயின் வீரர் புகினோ உடன் மோதினார். இதில் புகினோ 6-1, 6-2 என்ற கணக்கில் வென்று 3வத் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், டென்னிஸ் தரவ்ரிசையில் 4வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மான்பில்ஸ் 6-4, 6-3 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ.
- இவரது மனைவி சோபி கிரிகோரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
டொரன்டோ:
கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
அவர்கள் ஒரு நெருங்கிய குடும்பமாக இருக்கிறார்கள், சோபியும் பிரதம மந்திரியும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான, அன்பான மற்றும் கூட்டுச் சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டிரூடோவின் அப்பா பியர்ரி ட்ரூடோவும் தனது மனைவி மார்கரெட்டை 1979-ல் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குர்விந்தர் கடந்த 2021-ல் கனடா சென்றுள்ளார்
- உணவு வினியோகம் செய்து வந்த நிலையில், காருடன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்
கனடாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். படிப்பதற்காகவும், படித்து முடித்தபின் அங்கேயே தங்கி வேலை பார்ப்பதற்காகவும் அங்கு செல்லும் பஞ்சாப் மாநில இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம்.
இதே நோக்கத்துடன் 2021-ம் வருடம் ஜூலை மாதம் கனடா வந்தவர், இந்தியாவை சேர்ந்த குர்விந்தர் நாத் (24). இவர் உணவு வினியோக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கனடாவின் டோரோண்டோ நகருக்கருகே ஓன்டேரியோ ஏரி கரை பகுதியில் அமைந்துள்ள நகரம் மிஸிஸாகா.
ஜூலை 9-ம் தேதி நாத், மிஸிஸாகா பகுதியின் பிரிட்டானியா மற்றும் கிரெடிட்வியூ சாலைகளுக்கருகே அடையாளம் தெரியாத நபர்களால் குர்விந்தர் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து கனடாவின் காவல்துறை தெரிவித்திருப்பதாவது:-
இச்சம்பவத்தில் பலர் சம்பந்தபட்டிருக்கலாம் என தோன்றுகிறது. தாக்கியவர்கள் உணவுக்கான ஆர்டர் கொடுத்துள்ளனர். வழக்கமான ஆர்டர் போல் நினைத்து அதனை வழங்க நாத் வாகனத்தில் சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்தவுடன் அவரின் வாகனத்தை திருட முயற்சித்திருக்கின்றனர். அப்போது நடந்த போராட்டத்தில் அவரை பலமாக தாக்கியுள்ளனர். பிறகு அவரை அங்கேயே போட்டு விட்டு வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர்.
சம்பவத்தை கண்ட பொதுமக்களின் உதவியால், அருகிலுள்ள அவசர கால சிகிச்சை மையத்தில் குர்விந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி, ஜூலை 14-ம்தேதி உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் அருகே, ஓல்ட் கிரெடிட்வியூ மற்றும் ஓல்ட் டெர்ரி ரோடு அருகே திருடப்பட்ட அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
குர்விந்தர் படுகாயம் அடைந்ததால், அவரை தாக்கியவர்கள் பதட்டத்தில் வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். தடயவியல் நிபுணர்கள் வாகனத்தை பரிசோதித்து வருகின்றனர்.
இவ்வாறு காவல்துறை தெரிவித்திருக்கிறது.
கனடா நாட்டிற்கான இந்திய தூதரக அலுவலக அதிகாரி சித்தார்தா நாத் கூறும்போது "இது ஒரு இதயத்தை கலங்க செய்யும் சோக நிகழ்ச்சி. அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்தார்.
இந்திய தூதரக அலுவலகத்தின் உதவியுடன் குர்விந்தரின் உடல் வருகிற 27-ம் தேதி இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
உலகின் அமைதியான நாடுகளில் ஒன்று என கருதப்பட்டு வந்த கனடாவில் இத்தகைய ஒரு துணிகர சம்பவம் நடைபெற்றிருப்பது உலகெங்கும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
- உலக பெடரேசன் நடத்தும் தொடரில் வெல்லும் 2-வது சாம்பியன் பட்டம்
- சீன வீரரை நேர்செட் கணக்கில் வென்றார்
கனடா ஒபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீனாவில் லி ஷி பெங்-ஐ எதிர்கொண்டார். இதில் 21 வயதாக லக்சயா சென் 21-18, 22-20 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சீன வீரர் லி ஷி பெங் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ள லக்சயாக சென், இந்திய ஓபனை 2022-ம் ஆண்டு கைப்பற்றியிருந்தார். அதன்பின் தற்போது உலகளவில் விளையாடும் தொடரில் 2-வது சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- காலிஸ்தான் கொடியை ஏந்தியவாறு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
- இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சிலர் தேசிய கொடியுடன் அங்கு திரண்டனர்.
டொராண்டோ:
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க கோரி காலிஸ் தான் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
சமீபத்தில் அமெரிக்காவில் இந்திய துணை தூதர கத்துக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி நடத்த போவதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் அறிவித்தனர். அதன்படி அவர்கள் டொராண்டோவில் இந்திய துணை தூதரகத்துக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.
அவர்கள் காலிஸ்தான் கொடியை ஏந்தியவாறு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர். போராட்டத்தை அடுத்து இந்திய தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சிலர் தேசிய கொடியுடன் அங்கு திரண்டனர்.
அப்போது அவர்களை தாக்க காலிஸ்தான் ஆதரவாளர்கள் 2 பேர் முயன்றனர். தடுப்புகளை மீறி சென்ற அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கனடாவை தளமாக கொண்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. இதேபோல் லண்டனில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.






