search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    கனடா ஓபன் டென்னிஸ் - உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி
    X

    கனடா ஓபன் டென்னிஸ் - உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தது.
    • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் பெகுலா 6-2, 6-7 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

    இதன்மூலம் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்வியாடெக் கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

    Next Story
    ×