என் மலர்tooltip icon

    பெல்ஜியம்

    • வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது.

    பிரஸல்ஸ்:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப்-எப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி மொராக்கோ அணியிடம் 2-0 என தோல்வியடைந்தது.

    இந்த போட்டியைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் கலவரம் வெடித்தது. தலைநகரின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் வன்முறை ஏற்பட்டது. கலவர தடுப்பு போலீசாருடன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

    பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இரவு 7 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கலவரக்காரர்கள் பைரோடெக்னிக் பொருட்கள், எறிகணைகள், கம்புகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், நெடுஞ்சாலையில் தீ வைத்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தலையிட்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். 

    • கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
    • மர்மநபரின் வயிறு மற்றும் காலில் குண்டு பாய்ந்தது.

    பிரஸ்சல்ஸ்:

    பெல்ஜியம் நாட்டு தலைநகர் பிரஸ்சல்சில் உள்ள வடக்கு ரெயில் நிலையம் அருகே இரண்டு போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் இரண்டு போலீஸ் அதிகாரிகளை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த 2 அதிகாரிகளும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மர்மநபரின் வயிறு மற்றும் காலில் குண்டு பாய்ந்தது.

    பின்னர் காயம் அடைந்த 2 போலீஸ் அதிகாரிகள் மற்றும் மர்மநபரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு கழுத்தில் கத்திக்குத்து காயம் பலமாக ஏற்பட்டிருந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, "ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தார்.

    இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? போன்ற விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    இச்சம்பவம் பெல்ஜியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு கூறும்போது, "எனது எண்ணங்கள், இறந்த அதிகாரியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அதிகாரி நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன்.

    குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் தங்களது உயிரை பயணம் வைக்கிறார்கள் என்றார்.

    • 5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.
    • மேக் ரதர்போர்ட் 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்றார்.

    சோபியா :

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான மேக் ரதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளான்.

    மேக் ரதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது.

    மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றான 'ஷார்க்' என்கிற விமானத்தில் பயணம் செய்த மேக் ரதர்போர்ட் 3 மாதத்தில் தன்னுடைய லட்சிய பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் பருவமழை, மணல் புயல் மற்றும் கடுமையான வெப்பம் என அவரது வழியில் எதிர்பாராத பல தடைகள் வந்ததால் பயணம் நீண்ட காலம் நீடித்தது.

    அதன்படி கடந்த 5 மாதங்களில் 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளை சுற்றி வந்த மேக் ரதர்போர்ட் நேற்று பல்கோரியா தலைநகர் சோபியாவில் விமானத்தை தரையிறக்கி சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.

    மேக் ரதர்போர்ட்டை வரவேற்கவும் அவரது சாதனைகளைக் கொண்டாடவும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான மக்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்கள் கரவொலிகளை எழுப்பியும், ஆரவாரம் செய்தும் மேக் ரதர்போர்ட்டுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு தனது 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்று உலகின் இளம் வயது விமானி என்கிற பெருமையை அடைந்த மேக் ரதர்போர்ட் தற்போது 5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் 19 வயதில் விமானத்தில் தனியாக உலகை சுற்றி வந்த இளம் விமானி என்கிற பெருமைக்குரியவர் ஜாரா ரதர்போர்ட். இவர் வேறு யாரும் அல்ல, மேக் ரதர்போர்ட் மூத்த சகோதரி தான். அதாவது, தனது அக்காவின் சாதனையைதான் மேக் ரதர்போர்ட் முறியடித்துள்ளார்.

    • ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார்.
    • அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார்.

    நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி, அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள்.

    உடற்பயிற்சி ஆர்வலர்களான இவர்கள் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்- அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

    பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள ஹொவெனன் விமான தளத்தில், ஹெலிகாப்டர் குறிப்பிட்ட அடி உயரத்தில் ஒரே நிலையில் அசையாமல் பறந்து கொண்டிருந்தபோது அடிப்பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு புல்-அப்ஸ் செய்தனர்.

    முதலில் அர்ஜென் ஆல்பர்ஸ், ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். இதனால் முன்பு 23 முறை புல்-அப்ஸ் எடுத்திருந்த அர்மேனியாவின் ரோமன் சஹ்ரத்யனின் சாதனையை முறியடித்தார்.

    அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார். அவர் ஒரு நிமிடத்தில் 25 முறை புல்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார். அர்ஜென் ஆல்பர்ஸ் 2-ம் இடம் பிடித்தார்.

    • ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன.
    • போருக்கு பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்து முடக்கப்பட்டுள்ளது.

    பிரஸ்சல்ஸ்:

    உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.

    இதற்கிடையே, ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ரஷியாவின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் ரஷியா, உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

    • பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது.
    • உக்ரைன், மால்டோவாவை வேட்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

    பிரஸ்ஸல்ஸ்:

    நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனென்றால் உறுப்பு நாடு என்றால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும்.

    இதற்கிடையே, உக்ரைன் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று விண்ணப்பம் கொடுத்துள்ளது. அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மால்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

    • இந்த வெற்றி மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது
    • நெதர்லாந்து 31 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    ஆன்ட்வெர்ப்:

    புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா-பெல்ஜியம் இடையிலான லீக் ஆட்டம் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் நேற்றிரவு நடந்தது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் பெல்ஜியம் 3 கோல்களும் இந்தியா ஒரு கோலும் அடித்திருந்தன. பின்னர் இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங் 52-வது நிமிடத்திலும், ஜர்மன்பிரீத் சிங் 58-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதையடுத்து பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    13-வது லீக் போட்டி முடிவில் இந்தியா 10 வெற்றி, 3 தோல்வி என்று 29 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெல்ஜியம் 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நெதர்லாந்து 31 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    ×