என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய் - வைகோ
    X

    காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய் - வைகோ

    • பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய்.
    • விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்.

    த.வெ.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதை சுட்டிக்காட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய்.

    * கரூர் கொடுந்துயருக்கு முழுக்காரணமான விஜய் பொறுப்பற்று திசை திருப்புகிறார்.

    * நடந்த சம்பவத்திற்கு துளியளவும் வருத்தப்படாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் உள்ளார் விஜய்.

    * காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய்.

    * ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்.

    * தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளிநகையாட முனைகிறார் விஜய்.

    * முதலமைச்சர் மீது வெறுப்பையும், கசப்பையும் கொட்டி தீர்த்திருக்கிறார் விஜய்.

    * விஜயின் நிலைமை அனுதாபத்திற்கும் பரிதாபத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்.

    * விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×