என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும் - விஜயை மீண்டும் சீண்டிய சீமான்
    X

    நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும் - விஜயை மீண்டும் சீண்டிய சீமான்

    • ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.
    • நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது, பாதிக்கும்போது உங்களுக்கு தெரியும்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும்.

    * ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.

    * நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது, பாதிக்கும்போது உங்களுக்கு தெரியும்.

    * நான் இப்போது பேசுவது உங்களுக்கு வேடிக்கையாகத்தான் தெரியும்.

    * உங்கள் பிள்ளைகளுக்கு மலையை வெட்டி, மணலாக்கி, கல்லாக்கி, பெரிய வீட்டை வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை என் பிள்ளைகளுக்கு வாழறதுக்காக வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறேன்.

    * நீங்க காசை சேர்த்துவைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீங்க. நான் சுவாசிக்க நல்ல காற்றை வைத்துவிட்டு சாகணும்னு நினைக்கிறேன்.

    * கனிம கொள்ளையை தடுக்க ஒரே வழி என்னை அதிகாரத்தில் அமர வைப்பதுதான். வேறு வழியே கிடையாது

    * கனிம கொள்ளை குறித்து என்கிட்ட கேட்குறீங்க.. நேற்று ரொம்ப கூட்டம் வந்ததுல அவர் கிட்ட கேட்க வேண்டியதுதானே என்றார்.

    Next Story
    ×