என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. கூட்டணியில் சேர திட்டம்? - கட்சி நிர்வாகிகளுடன் சீமான் தீவிர ஆலோசனை
    X

    அ.தி.மு.க. கூட்டணியில் சேர திட்டம்? - கட்சி நிர்வாகிகளுடன் சீமான் தீவிர ஆலோசனை

    • 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளார்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை எட்டி பிடித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

    2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை எட்டி பிடித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து அந்த கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இது தொடர்பாக அவர் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக் கொண்டே உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் இந்த கூட்டணி அழைப்பு பற்றி சீமானிடம் இதற்கு முன்பு நிருபர்கள் கேள்வி எழுப்பிய போதெல்லாம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது என்றே கூறி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சீமானின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது போல தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பு பற்றி கடந்த 2 நாட்களாக கருத்து தெரிவித்து வரும் சீமான் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பொறுத்திருங்கள். எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    இதன் மூலம் சீமான் தனித்து போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடன் சீமான் கூட்டணி அமைத்தால் அது நிச்சயம் அ.தி.மு.க. அணிக்கு பலமாகவே அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×