என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி- முக்கிய அறிவிப்பை வெளியிடும் சீமான்
    X

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி- முக்கிய அறிவிப்பை வெளியிடும் சீமான்

    • கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாத வகையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

    இதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கூட்டணி தொடர்பாக பலமுறை ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இப்படி அ.தி.மு.க. கூட்டணி கதவுகள் திறந்திருக்கும் நிலையில் சீமான் பிடி கொடுக்காமலேயே இருந்து வருகிறார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கே நாம் தமிழர் கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் கோவையில் நடைபெறும் கூட்டத்தை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை மறுநாள் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசுகிறார்.

    அப்போது வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்துவிடுமாறு சீமானுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கூட்டத்தில் சீமான் தனித்து போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு யாருடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதி செய்ய இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலையும் சீமான் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.

    Next Story
    ×