என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தொண்டர்களின் இந்த நிலைக்கு இ.பி.எஸ். தான் காரணம் - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
- தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு காவல்துறையினரால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
- எடப்பாடி பழனிசாமி சிறிது கூட மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் மீதும், காவல்துறை மீதும் பழி போடுகிறார்.
சென்னை:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கூறியதாவது:-
* பிரசார கூட்டத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க.வினர் பின்பற்றவில்லை.
* ஆம்புலன்ஸை வழிமறித்து ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
* தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு காவல்துறையினரால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
* அ.தி.மு.க.வினர் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியதே த.வெ.க. தொண்டர்களின் இந்த மனநிலைக்கு காரணம்.
* எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனை கதைகளையும் பரப்பி வருகிறார்.
* த.வெ.க. தொண்டர்களின் இந்த மனநிலைக்கு மாற்றிய எடப்பாடி பழனிசாமியும் இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர்தான்.
* எடப்பாடி பழனிசாமி சிறிது கூட மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் மீதும், காவல்துறை மீதும் பழி போடுகிறார் என்றார்.






