என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கச்சத்தீவு விவகாரம்: மீனவர்களுக்கு நன்மை செய்வது போல் தி.மு.க. நாடகம்- இ.பி.எஸ். குற்றச்சாட்டு
- 5 பிரதமர்கள் தலைமையில் அமைச்சரவையில் தி.மு.க. அரசு அங்கம் வகித்திருந்தது.
- கச்சத்தீவை மீட்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை:
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசு சபையில் கொண்டுவந்த தீர்மானத்தில் அ.தி.மு.க.வின் கருத்துகளை தெரிவித்துள்ளோம்.
* தமிழக மீனவர்களின் உரிமை பறிபோய் விடும் என அப்போதே எம்.ஜி.ஆர். எதிர்த்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க. எதிர்த்து வருகிறது.
* காலம் காலமாக கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
* வலைகளை காய வைக்கவும், ஓய்வெடுக்கவும் கச்சத்தீவை மீனவர்கள் பயன்படுத்தினர்.
* கச்சத்தீவு தரை வார்க்கப்பட்டதால் அன்று முதல் இன்று வரை மீனவர்களுக்கு சோதனை.
* 5 பிரதமர்கள் தலைமையில் அமைச்சரவையில் தி.மு.க. அரசு அங்கம் வகித்திருந்தது.
* கச்சத்தீவை மீட்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* தேர்தல் நெருங்குவதையொட்டி மீனவர்களுக்கு நன்மை செய்வது போல் நாடகம்.
* சட்டமன்ற தேர்தல் வருவதால் தான் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள்.
* கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வரப்போகும் தேர்தல்தான் காரணம்.
* 39 எம்.பி.க்களும் சேர்ந்து கச்சத்தீவு விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அழுத்தம் தரவில்லை.
* கச்சத்தீவை மீட்க 2008-ம் ஆண்டு ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆட்சிக்கு வந்த பின் வழக்கில் அரசையும் இணைத்தார் என்றார்.






