என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொய், துரோகத்தை தவிர எடப்பாடியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்- மு.க.ஸ்டாலின்
- நாள்தோறும் அவதூறுகளை அடித்துவிடுகிறார்கள், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்புகிறார்.
- மக்களை காக்க தி.மு.க. அரசிற்கு யாரும் சொல்லி தரவேண்டியதில்லை.
தென்காசி:
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 22,70,293 மெட்ரின் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
* அ.தி.மு.க. ஆட்சியை போல் இல்லாமல் செப்டர்பர் 1-ந்தேதி முதலே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
* தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் ஆயிரம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
* கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் 1,70,45,545 மெட்ரின் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
* தி.மு.க. ஆட்சியில் பாசன நிலத்தின் பரப்பளவு அதிகரித்து கொள்முதலும் அதிகரித்துள்ளது.
* மக்களை மகிழ்விக்கவும் மக்களை காக்கவுமே இந்த ஆட்சி நடந்து வருகிறது.
* வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தேன்.
* 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசியதுடன் போராட்டங்களை கொச்சைப்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
* எடப்பாடி பழனிசாமியிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
* நாள்தோறும் அவதூறுகளை அடித்துவிடுகிறார்கள், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்புகிறார்.
*தி.மு.க. அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை, அதனால் அவதூறு பரப்புகின்றனர்.
* மக்களை காக்க தி.மு.க. அரசிற்கு யாரும் சொல்லி தரவேண்டியதில்லை என்றார்.






