search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என் குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை- ஜெயக்குமார்
    X

    என் குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை- ஜெயக்குமார்

    • வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
    • சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம்.

    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    * சென்னையில் பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

    * பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பினர்.

    * வாக்குப்பதிவு சதவீத குளறுபடி, தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

    * என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை.

    * வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.

    * பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    * சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தென்சென்னை பாராளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் இருந்தனர்.

    Next Story
    ×