search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதாவை மக்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள்- கனிமொழி எம்.பி.
    X

    பா.ஜனதாவை மக்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள்- கனிமொழி எம்.பி.

    • 40 தொகுதிகளிலும் தி.மு.க.-இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
    • தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி நிலவுகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நிச்சயமாக தி.மு.க.வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.-இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

    நான் எனது தூத்துக்குடி தொகுதியில் மட்டும் இல்லாமல், மேலும் 10 அல்லது 12 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். சென்னை தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வது பற்றி திட்டம் உள்ளது. எனது தேர்தல் பிரச்சார பயணத் திட்டம் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டி என்று பார்க்கும் போது, தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் நிச்சயமாக பா.ஜ.க.வை, தமிழக மக்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள்.

    அண்ணாமலை சவால் விட்டுக் கொண்டு இருக்கட்டும். தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது, பார்த்துக் கொள்ளட்டும். பா.ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களின் நிலை என்னவாக இருக்கிறது என்று நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் முக்கியமான ஒரு மாநிலமாக இருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்குக் காரணம், திராவிட இயக்கங்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு இருக்கின்ற, ஆட்சி நடப்பதால்தான்.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு ஒருபோதும் உரு வாகாது. அந்த நிலை ஏற்பட்டால், தமிழ்நாட்டை யாருமே காப்பாற்ற முடியாது. இப்போது முதலில் அனைவரும் சேர்ந்து, நமது இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×