என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையில் இருந்து பா.ஜ.க. வெளிநடப்பு
- ஜவாஹிருல்லா நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை விமர்சனம் செய்து பேசினார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்து பேசியதாகக் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கொந்தளித்து பேசினார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அப்போது சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை விமர்சனம் செய்து பேசினார்.
அதை தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்து பேசியதாகக் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கொந்தளித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரிய தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் வெளிநடப்பு செய்தனர்.
Next Story






