search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.மணி
    X
    ஜி.கே.மணி

    உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: ஜி.கே.மணி

    உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    பவானியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

    முன்னதாக பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 2020 ஜனவரி 4-ந்தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் பற்றிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் ராக்கெட் ஏவப்பட்டது. இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பாக கருதப்படுகிறது. அதற்காக எங்கள் கட்சி சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்.

    டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை உள்பட மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டங்களை அறிவித்து தனியார் நிறுவனங்களுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வேலையை தொடங்கியது.

    டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். டெல்டா மாவட்ட பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×