என் மலர்
செய்திகள்

ஆயுள் தண்டனை பெற்ற தேவகி, சசிக்குமார் ஆகியோரை கோர்ட்டில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தபோது எடுத்த படம்.
கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
கடலூரில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பட்டம்மாள்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). தனியார் பள்ளி வேனில் கிளீனராக இருந்து வந்தார். இவருடைய மனைவி தேவகி (33). திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இவர்களது பக்கத்து தெருவான உப்பலவாடி தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (30). வெல்டர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிக்குமாருக்கும், தேவகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
இதை அறிந்த ஆறுமுகம் 2 பேரையும் கண்டித்தார். இதனால் தங்களின் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் ஆறுமுகத்தை கொலை செய்ய 2 பேரும் திட்டம் தீட்டினர். கடந்த 5-6-2015 அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஆறுமுகத்துக்கு டீயில் தூக்க மாத்திரைகளை கலந்து தேவகி கொடுத்தார்.
அதை குடித்ததும் ஆறுமுகம் அயர்ந்து தூங்கினார். இதையடுத்து இரவு 11 மணிக்கு தேவகி தனது கள்ளக்காதலன் சசிக்குமாரை வரவழைத்தார். தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்தை, தேவகியும், சசிக்குமாரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகி, சசிக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி திலகவதி தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட தேவகி மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அதைத்தொடர்ந்து சசிக்குமார் கடலூர் மத்திய சிறையிலும், தேவகி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதாடினார்.
கடலூர் மஞ்சக்குப்பம் பட்டம்மாள்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). தனியார் பள்ளி வேனில் கிளீனராக இருந்து வந்தார். இவருடைய மனைவி தேவகி (33). திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இவர்களது பக்கத்து தெருவான உப்பலவாடி தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (30). வெல்டர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிக்குமாருக்கும், தேவகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
இதை அறிந்த ஆறுமுகம் 2 பேரையும் கண்டித்தார். இதனால் தங்களின் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் ஆறுமுகத்தை கொலை செய்ய 2 பேரும் திட்டம் தீட்டினர். கடந்த 5-6-2015 அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஆறுமுகத்துக்கு டீயில் தூக்க மாத்திரைகளை கலந்து தேவகி கொடுத்தார்.
அதை குடித்ததும் ஆறுமுகம் அயர்ந்து தூங்கினார். இதையடுத்து இரவு 11 மணிக்கு தேவகி தனது கள்ளக்காதலன் சசிக்குமாரை வரவழைத்தார். தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்தை, தேவகியும், சசிக்குமாரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகி, சசிக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி திலகவதி தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட தேவகி மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அதைத்தொடர்ந்து சசிக்குமார் கடலூர் மத்திய சிறையிலும், தேவகி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதாடினார்.
Next Story






