என் மலர்tooltip icon

    கால்பந்து

    • ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 1-1 என கோல் அடித்திருந்தது
    • கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்து வெற்றி

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இரண்டு அணி வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்பெயின் வீராங்கனைகள் இலக்கை நோக்கி பந்து கடத்தி சென்றனர். இருந்தாலும் முதல் பாதி நேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் கோல் அடிக்க முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அந்த அணியின் மரியானோ கால்டென்டே கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

    பிறகு 90 நிமிடம் வரை நெதர்லாந்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்படும். அந்த நேரத்தில் (91-வது நிமிடம்) நெதர்லாந்து வீராங்கனை ஸ்டெபானி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.

    நாக்அவுட் போட்டி என்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. தலா 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. முதல் 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 111-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை சல்மா செலிஸ்டெ பராலுயெலோ அயுங்கோனா கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை நெதர்லாந்து வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை.

    எனவே, ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணிக்கு 8 முறையும், நெதர்லாந்து அணிக்கு 2 முறையும கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

    நெதர்லாந்து வீராங்கனைகள் இரண்டு முறை ஆஃப்சைடு, ஸ்பெயின் வீராங்கனைகள் ஆஃப்சைடு செய்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இலக்கை நோக்கி ஸ்பெயின் 8 முறையும், நெதர்லாந்து 4 முறையில் பந்தை அடித்தன. பந்து 62 சதவீதம் ஸ்பெயின் வசமே இருந்தது.

    • 11-ந்தேதி நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் அணிகள் மோதுகின்றன.
    • 12-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

    வெலிங்டன்:

    9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 'லீக்' ஆட்டகள் 3-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதன் முடிவில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, மொராக்கோ ஆகிய 16 அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, அயர்லாந்து, ஜாம்பியா, கோஸ்டாரிகா, சீனா, ஹைத்தி, போர்ச்சுக்கல், வியட்நாம், பிரேசில், பனாமா, இத்தாலி, அர்ஜென்டினா, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய அணி கள் வெளியேற்றப்பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் முடிவில் ஸ்பெயின், ஜப்பான், நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால் இறுதி ஆட்டங்கள் 11-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் அணிகள் மோதுகின்றன. 12-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

    அரை இறுதி போட்டிகள் 15 மற்றும் 16-ந்தேதிகளிலும், இறுதிப் போட்டி 20-ந்தேதி யும் நடக்கிறது.

    • 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை
    • 12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன.

    தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. நேற்று கடைசி இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் கொலம்பியா- ஜமைக்கா அணிகள் மோதின. இதில் கொலம்பியா 1-0 என ஜமைக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்- மொரோக்கோ அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 4-0 என மொரோக்கோவை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறின.

    காலிறுதி ஆட்டங்கள் வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றன. 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படுகிறது.
    • கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை விழுங்கியது.

    கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை ஒன்று விழுங்கிவிட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவை சேர்ந்தவர் 29 வயதான இயேசு ஆல்பர்டோ லோபஸ் ஓர்டிஸ் என்ற கால்பந்து வீரர். தமது ரசிகர்களால் சுச்சோ என அறியப்படும் இவர், துரதிர்ஷ்டவசமாக முதலைக்கு இரையாகியுள்ளார்.

    அந்த முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அதிகாரிகளே துணிச்சலுடன் நடவடிக்கை முன்னெடுத்து, சடலத்தை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க, பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இத்தாலி அணிகள் மோதின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான் நார்வே, ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜிரியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில் இன்று ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இத்தாலி அணிகள் மோதின. 11-வது நிமிடத்தில் முதல் கோலை இத்தாலி அணி போட்டது. தென் ஆப்பிரிக்கா அணி கோல் போட முடியாமல் தவித்த நிலையில் இத்தாலி அணி வீராங்கனையான பெனெடெட்டா ஒர்சி தங்களது அணி பக்கமே கோலை போட்டுகொடுத்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது.

    இதனையடுத்து நடந்த 2-வது பாதியில் 67-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும் 74-வது நிமிடத்தில் இத்தாலி அணியும் கோல் போட்டனர். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். இந்த பரபரப்பான ஆட்டத்தில் இறுதி நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கோலை போட்டதன் 3-2 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

    ஓன் கோலால் இந்தாலி அணி தங்களது வெற்றி வாய்ப்பை இழந்தது பரிதாபத்துக்குரியதாக இருந்தது.

    • கடைசி வரை போராடிய வியட்நாம் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தோல்வியடைந்தது.
    • நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பி மற்றும் சி பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா, நைஜிரியா மற்றும் சி பிரிவில் ஜப்பான், ஸ்பெயின் ஆகிய அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று இ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வியட்நாம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கோல் போட ஆரம்பித்த நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து கோல்களை பதிவு செய்தனர்.

    இறுதியில் நெதர்லாந்து அணி 7 கோல்களை பதிவு செய்தது. கடைசி வரை போராடிய வியட்நாம் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தோல்வியடைந்தது. இந்த பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டியில் 0-0 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது.

    இதன் மூலம் இ பிரிவில் வியட்நாம் மற்றும் போர்ச்சுகல் அணி வெளியேறியது. நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    • பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரிபப்ளிக் ஆப் அயர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் ஒரு கோலும் அடிக்கவில்லை.
    • பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் நைஜிரியா அணி 2-வது இடத்திலும் உள்ளது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கனடா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹேலி ரசோ 9-வது நிமிடத்திலும் 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.

    முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியிலும் ஆஸ்திரேலிய அணி 2 கோல்களை பதிவு செய்தது. மேரி ஃபோலர் மற்றும் ஸ்டீபனி கேட்லி ஒரு கோல்கள் அடித்தனர்.

    இதனால் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

    பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரிபப்ளிக் ஆப் அயர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசி வரை ஒரு கோல்களும் அடிக்கவில்லை. பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் நைஜிரியா அணி 2-வது இடத்திலும் உள்ளது.

    • ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
    • ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    இன்று சி பிரிவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஜப்பான் வீராங்கனையான ஹினாட்டா இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். முதல் கோலை 12-வது நிமிடத்திலும், 2-வது கோலை 40-வது நிமிடத்திலும் அடித்தார். மேலும் 29-வது நிமிடத்தில் ரிகோவும் 82-வது நிமிடத்தில் மினா டனாகாவும் கோல் அடித்தனர்.

    இறுதியில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய ஸ்பெயின் அணி ஒரு கோலை கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

    இதனை தொடர்ந்து சி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஜாம்பியா நாடுகள் மோதின. இதில் ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையில் ஜாம்பியா தனது முதல் வெற்றியைப் பெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறி விட்டன.

    • நார்வே, நியூசிலாந்து அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றிருந்தன
    • கோல்கள் அடிப்படையில் நார்வே அணி முன்னேற்றம்

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    'ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ் அணிகள் இடம்பிடித்திருந்தன. நான்கு அணிகளிலும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின.

    அதன்முடிவில், நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. சுவிட்சர்லாந்து 2 போட்டிகளில் டிரா செய்திருந்ததால் 5 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    நார்வே, நியூசிலாந்து அணிகள் தலா ஒரு டிராவுடன், தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால் நார்வே 6 கோல்கள் அடித்திருந்தது. 1 கோல் விட்டுக்கொடுத்திருந்தது. நியூசிலாந்து ஒரு கோல் அடித்து ஒரு கோல் விட்டுக்கொடுத்திருந்தது.

    இதனால் கோல்கள் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குத்தள்ளி நர்வே 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேளியுள்ளது.

    'பி' குரூப்பில் நைஜீரியா, கனடா, ஆஸ்திரேலியா இடையெ கடும் போட்டி நிலவுகிறது.

    'சி' பிரிவில் ஸ்பெயின், ஜப்பான் அணிகள் ஏறக்குறைய நாக்அவுட் சுற்றை உறுதி செய்துவிட்டன.

    • அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது.
    • 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.

    டுனிடின்:

    9-வது உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    நியூசிலாந்தில் உள்ள டுனிடினில் இன்று காலை நடந்த ஆட்டத்தில் 'ஜி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

    அர்ஜென்டினா தரப்பில் சோபியா பிரான் (74-வது நிமிடம்), ரோமினா நுனாஸ் (79) ஆகியோரும், தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிண்டா மொதாலோ (30-வது நிமிடம்), ககட்லனா (66) ஆகியோரும் கோல் அடித்தனர். 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதே போல தென்ஆப்பிரிக்கா 1-2 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோற்றது.

    இன்று நடைபெறும் மற்ற ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் ('ஜி' பிரிவு), இங்கிலாந்து-டென்மார்க், சீனா-ஹைதி ('டி' பிரிவு) அணிகள் மோதுகின்றன.

    • தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார்.
    • நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

    பிபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியில் இடம்பிடித்துள்ளார் 25 வயது வீராங்கனையான யமிலா ரோட்ரிக்ஸ். இத்தாலிக்கு எதிரான முதல் க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக களமிறங்கிய இவர், தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார்.

    இதையடுத்து அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு பதிலாக போர்ச்சுகல் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தனது காலில் பச்சை குத்தியதால் அர்ஜென்டினா ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

    தற்போது அர்ஜென்டினா உலகக் கோப்பை அணியில் அங்கம் வகிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு அவர் அதிக விசுவாசத்தையும் ஆதரவையும் காட்ட வேண்டும் என்று நம்பும் சில அர்ஜென்டினா ரசிகர்களிடமிருந்து இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இது குறித்து பேசிய யாமிலா ரோட்ரிக்ஸ், "தேசிய அணியில் மெஸ்சி எங்கள் கேப்டன், ஆனால் ரொனால்டோ எனது உத்வேகம் மற்றும் வழிபடும் உருவம் என்று நான் கூறுவதால், நான் மெஸ்சியை வெறுக்கிறேன் என்று அர்த்தம் இல்லை.

    நான் எப்போது மெஸ்சிக்கு எதிரானவள் என்று சொன்னேன்? நான் சொல்லாத விஷயங்களைச் சொல்வதை நிறுத்துங்கள். நான் மிகவும் கடினமான விமர்சனங்களை சந்திக்கிறேன். நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

    என்று யமிலா கூறினார்.  

    • சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
    • ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு குழு போட்டியில் பங்கேற்க ஆசிய அளவில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகளுக்கு தான் அனுமதி அளிக்க வேண்டும் என்பது மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நிபந்தனையாகும். இதனால் ஆசிய தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்திய ஆண்கள் கால்பந்து அணி, 11-வது இடத்தில் இருக்கும் இந்திய பெண்கள் கால்பந்து அணி ஆகியவற்றுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குரும் தலையிட்டு இந்திய கால்பந்து அணிகள் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் உள்பட பலரும் வற்புறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் அணிகள் பங்கேற்பதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி இந்திய கால்பந்து அணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து நேற்று மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் தனது டுவிட்டர் பதிவில், 'இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வருகிற ஆசிய விளையாட்டு போட்டியில் நமது தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி தகுதி பெறாத இவ்விரு அணிகளும் பங்கேற்பதற்கு வசதியாக விதிகளை தளர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய கால்பந்து அணிகளுக்கு விதிமுறையை தளர்த்தி அனுமதி வழங்கி இருப்பதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே, பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    ×