என் மலர்tooltip icon

    கால்பந்து

    • ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இத்தாலி அணிகள் மோதின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான் நார்வே, ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜிரியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில் இன்று ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இத்தாலி அணிகள் மோதின. 11-வது நிமிடத்தில் முதல் கோலை இத்தாலி அணி போட்டது. தென் ஆப்பிரிக்கா அணி கோல் போட முடியாமல் தவித்த நிலையில் இத்தாலி அணி வீராங்கனையான பெனெடெட்டா ஒர்சி தங்களது அணி பக்கமே கோலை போட்டுகொடுத்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது.

    இதனையடுத்து நடந்த 2-வது பாதியில் 67-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும் 74-வது நிமிடத்தில் இத்தாலி அணியும் கோல் போட்டனர். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். இந்த பரபரப்பான ஆட்டத்தில் இறுதி நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கோலை போட்டதன் 3-2 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

    ஓன் கோலால் இந்தாலி அணி தங்களது வெற்றி வாய்ப்பை இழந்தது பரிதாபத்துக்குரியதாக இருந்தது.

    • கடைசி வரை போராடிய வியட்நாம் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தோல்வியடைந்தது.
    • நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பி மற்றும் சி பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா, நைஜிரியா மற்றும் சி பிரிவில் ஜப்பான், ஸ்பெயின் ஆகிய அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று இ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வியட்நாம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கோல் போட ஆரம்பித்த நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து கோல்களை பதிவு செய்தனர்.

    இறுதியில் நெதர்லாந்து அணி 7 கோல்களை பதிவு செய்தது. கடைசி வரை போராடிய வியட்நாம் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தோல்வியடைந்தது. இந்த பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டியில் 0-0 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது.

    இதன் மூலம் இ பிரிவில் வியட்நாம் மற்றும் போர்ச்சுகல் அணி வெளியேறியது. நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    • பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரிபப்ளிக் ஆப் அயர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் ஒரு கோலும் அடிக்கவில்லை.
    • பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் நைஜிரியா அணி 2-வது இடத்திலும் உள்ளது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கனடா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹேலி ரசோ 9-வது நிமிடத்திலும் 39-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.

    முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியிலும் ஆஸ்திரேலிய அணி 2 கோல்களை பதிவு செய்தது. மேரி ஃபோலர் மற்றும் ஸ்டீபனி கேட்லி ஒரு கோல்கள் அடித்தனர்.

    இதனால் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

    பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரிபப்ளிக் ஆப் அயர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசி வரை ஒரு கோல்களும் அடிக்கவில்லை. பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் நைஜிரியா அணி 2-வது இடத்திலும் உள்ளது.

    • ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
    • ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    இன்று சி பிரிவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஜப்பான் வீராங்கனையான ஹினாட்டா இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். முதல் கோலை 12-வது நிமிடத்திலும், 2-வது கோலை 40-வது நிமிடத்திலும் அடித்தார். மேலும் 29-வது நிமிடத்தில் ரிகோவும் 82-வது நிமிடத்தில் மினா டனாகாவும் கோல் அடித்தனர்.

    இறுதியில் ஜப்பான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய ஸ்பெயின் அணி ஒரு கோலை கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

    இதனை தொடர்ந்து சி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஜாம்பியா நாடுகள் மோதின. இதில் ஜாம்பியா அணி 3-1 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையில் ஜாம்பியா தனது முதல் வெற்றியைப் பெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறி விட்டன.

    • நார்வே, நியூசிலாந்து அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றிருந்தன
    • கோல்கள் அடிப்படையில் நார்வே அணி முன்னேற்றம்

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    'ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ் அணிகள் இடம்பிடித்திருந்தன. நான்கு அணிகளிலும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின.

    அதன்முடிவில், நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. சுவிட்சர்லாந்து 2 போட்டிகளில் டிரா செய்திருந்ததால் 5 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    நார்வே, நியூசிலாந்து அணிகள் தலா ஒரு டிராவுடன், தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால் நார்வே 6 கோல்கள் அடித்திருந்தது. 1 கோல் விட்டுக்கொடுத்திருந்தது. நியூசிலாந்து ஒரு கோல் அடித்து ஒரு கோல் விட்டுக்கொடுத்திருந்தது.

    இதனால் கோல்கள் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குத்தள்ளி நர்வே 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேளியுள்ளது.

    'பி' குரூப்பில் நைஜீரியா, கனடா, ஆஸ்திரேலியா இடையெ கடும் போட்டி நிலவுகிறது.

    'சி' பிரிவில் ஸ்பெயின், ஜப்பான் அணிகள் ஏறக்குறைய நாக்அவுட் சுற்றை உறுதி செய்துவிட்டன.

    • அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது.
    • 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.

    டுனிடின்:

    9-வது உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    நியூசிலாந்தில் உள்ள டுனிடினில் இன்று காலை நடந்த ஆட்டத்தில் 'ஜி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

    அர்ஜென்டினா தரப்பில் சோபியா பிரான் (74-வது நிமிடம்), ரோமினா நுனாஸ் (79) ஆகியோரும், தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிண்டா மொதாலோ (30-வது நிமிடம்), ககட்லனா (66) ஆகியோரும் கோல் அடித்தனர். 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதே போல தென்ஆப்பிரிக்கா 1-2 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோற்றது.

    இன்று நடைபெறும் மற்ற ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் ('ஜி' பிரிவு), இங்கிலாந்து-டென்மார்க், சீனா-ஹைதி ('டி' பிரிவு) அணிகள் மோதுகின்றன.

    • தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார்.
    • நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

    பிபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியில் இடம்பிடித்துள்ளார் 25 வயது வீராங்கனையான யமிலா ரோட்ரிக்ஸ். இத்தாலிக்கு எதிரான முதல் க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக களமிறங்கிய இவர், தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார்.

    இதையடுத்து அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு பதிலாக போர்ச்சுகல் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தனது காலில் பச்சை குத்தியதால் அர்ஜென்டினா ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

    தற்போது அர்ஜென்டினா உலகக் கோப்பை அணியில் அங்கம் வகிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு அவர் அதிக விசுவாசத்தையும் ஆதரவையும் காட்ட வேண்டும் என்று நம்பும் சில அர்ஜென்டினா ரசிகர்களிடமிருந்து இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இது குறித்து பேசிய யாமிலா ரோட்ரிக்ஸ், "தேசிய அணியில் மெஸ்சி எங்கள் கேப்டன், ஆனால் ரொனால்டோ எனது உத்வேகம் மற்றும் வழிபடும் உருவம் என்று நான் கூறுவதால், நான் மெஸ்சியை வெறுக்கிறேன் என்று அர்த்தம் இல்லை.

    நான் எப்போது மெஸ்சிக்கு எதிரானவள் என்று சொன்னேன்? நான் சொல்லாத விஷயங்களைச் சொல்வதை நிறுத்துங்கள். நான் மிகவும் கடினமான விமர்சனங்களை சந்திக்கிறேன். நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

    என்று யமிலா கூறினார்.  

    • சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
    • ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு குழு போட்டியில் பங்கேற்க ஆசிய அளவில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகளுக்கு தான் அனுமதி அளிக்க வேண்டும் என்பது மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நிபந்தனையாகும். இதனால் ஆசிய தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்திய ஆண்கள் கால்பந்து அணி, 11-வது இடத்தில் இருக்கும் இந்திய பெண்கள் கால்பந்து அணி ஆகியவற்றுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குரும் தலையிட்டு இந்திய கால்பந்து அணிகள் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் உள்பட பலரும் வற்புறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் அணிகள் பங்கேற்பதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி இந்திய கால்பந்து அணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து நேற்று மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் தனது டுவிட்டர் பதிவில், 'இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வருகிற ஆசிய விளையாட்டு போட்டியில் நமது தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி தகுதி பெறாத இவ்விரு அணிகளும் பங்கேற்பதற்கு வசதியாக விதிகளை தளர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய கால்பந்து அணிகளுக்கு விதிமுறையை தளர்த்தி அனுமதி வழங்கி இருப்பதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே, பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
    • சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்

    பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.

    மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.

    இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.

    • கொலம்பியா முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.
    • நார்வே அணி, சுவிட்சர்லாந்துடன் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததது.

    மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் தென் கொரியா அணிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கால்பந்து மைதானத்தில் மோதின.

    இந்த போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. கொலம்பியா முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகள் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கொலம்பியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இதேபோல தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நார்வே அணி, சுவிட்சர்லாந்துடன் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததது.

    • ஆட்டம் முழுவதும் ஏறக்குறைய 67 சதவீதம் பந்து நியூசிலாந்து வசமே இருந்தது.
    • இரண்டாவது பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்கமுடியவில்லை.

    வெலிங்டன்:

    பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது.

    6-வது நாளான இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியே வெற்றி பெறும் என்று பலரும் நினைத்தனர். அதற்கேற்றவாறு போட்டியின் பெரும்பாலான நேரங்களில் பந்து அவர்களின் வசமே இருந்தது.

    ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தங்களது முதல் உலகக் கோப்பை போட்டியில் அறிமுகமான பிலிப்பைன்ஸ் அணி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. 24-வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் வீராங்கனை சரீனா போல்டன் முதல் கோல் அடித்தார். இதன் மூலம் பிலிப்பைன்ஸ் அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

    இரண்டாவது பாதியில் நியூசிலாந்து அணியின் வசமே பந்து அதிக நேரம் இருந்தது. அவர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சியை பிலிப்பைன்ஸ் கோல் கீப்பர் ஒலிவியா மெக்டானியல் அற்புதமாகத் தடுத்தார். அணியின் வெற்றியில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு. இரண்டாவது பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்கமுடியவில்லை.

    ஆட்டம் முழுவதும் ஏறக்குறைய 67 சதவீதம் பந்து நியூசிலாந்து வசமே இருந்தது. ஆனால் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் பிலிப்பைன்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மகளிர் உலகக் கோப்பையில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது.
    • இன்றைய லீக் ஆட்டங்களில் கொலம்பியா-தென்கொரியா, நியூசிலாந்து-பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து- நார்வே அணிகள் மோதுகின்றன.

    மெல்போர்ன்:

    பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் அமெரிக்கா, முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஜப்பான், நார்வே உள்ளிட்ட 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் 5-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஆக்லாந்தில் நடந்த (ஜி பிரிவு) ஆட்டம் ஒன்றில் இத்தாலி-அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில், மாற்று வீராங்கனையாக களம் கண்ட இத்தாலியின் கிறிஸ்டினா ஜிரெலி 87-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது. முடிவில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

    அர்ஜென்டினா ஆண்கள் அணி உலகக் கோப்பையை வென்று இருந்தாலும், பெண்கள் அணியை பொறுத்தமட்டில் இன்னும் கொஞ்சம் கத்துக்குட்டி தான். 4-வது முறையாக உலகக் கோப்பையில் ஆடும் அர்ஜென்டினா பெண்கள் அணி இன்னும் ஒரு வெற்றியை கூட சுவைத்தது கிடையாது என்பது நினைவுகூரத்தக்கது.

    மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ('எச்' பிரிவு) 2 முறை சாம்பியனான ஜெர்மனி எதிர்பார்த்தது போல் 6-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான மொராக்கோவை ஊதித்தள்ளியது. பந்தை அதிக நேரம் (75 சதவீதம்) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி தரப்பில் கேப்டன் அலெக்சாண்ட்ரா போப் 2 கோலும் (11-வது, 39-வது நிமிடம்), கிலாரா புல் (46-வது நிமிடம்), லீ ஸ்சுலெர் (90-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். மேலும் எதிரணியினரின் கவனக்குறைவு காரணமாக இரு சுயகோலும் கிடைத்தன.

    அடிலெய்டில் நடந்த ('எப்' பிரிவு) இன்னொரு ஆட்டத்தில் வலுவாக கோலோச்சிய பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான பனாமாவை பந்தாடியது. பிரேசில் அணியில் ஆரிடினா போர்ஜெஸ் (19-வது, 39-வது, 70-வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் தனது அறிமுக ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' கோல்கள் அடித்த முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமையை ஆரிடினா போர்ஜெஸ் பெற்றார்.

    இன்றைய லீக் ஆட்டங்களில் கொலம்பியா-தென்கொரியா, நியூசிலாந்து-பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து- நார்வே அணிகள் மோதுகின்றன.

    ×