என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் சதம்: ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இந்தியா படுதோல்வி
Byமாலை மலர்14 Jan 2020 3:02 PM GMT (Updated: 14 Jan 2020 3:02 PM GMT)
மும்பை வான்கடே ஒருநாள் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத நிலையில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வான்கடேயில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 255 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா 39 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 255 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. ஆரோன் பிஞ்ச் 110 ரன்னுடனும், டேவிட் வார்னர் 128 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா 39 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 255 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. ஆரோன் பிஞ்ச் 110 ரன்னுடனும், டேவிட் வார்னர் 128 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X