என் மலர்
விளையாட்டு
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று தொடங்கியது.
போட்டிக்கான டாஸ் 7.30 மணியளவில் சுண்டப்பட்டது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் சந்தீப் வாரியர் ஆகியோர் அறிமுகமாகிறார். இலங்கை அணியில் காயமடைந்த உதனாவுக்கு பதில் நிசங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள்: 1.ஷிகர் தவான் (கேப்டன்), 2.ருதுராஜ் கெய்க்வாட், 3.தேவதத் படிக்கல், 4.சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 5.நிதீஷ் ராணா, 6.புவனேஷ்வர் குமார், 7.சந்தீப் வாரியர், 8.சேத்தன் சாகரியா, 9.குல்தீப் யாதவ், 10.வருண் சக்ரவர்த்தி, 11.ராகுல் சாஹர்.
இலங்கை அணி வீரர்கள்: 1.அவிஷ்கா பெர்னாண்டோ, 2.மினோட் பனுகா (விக்கெட் கீப்பர்), 3.சதீரா சமரவிக்ரமா, 4.தனஞ்செய டி சில்வா, 5.பாதும் நிசங்கா, 6.ரமேஷ் மெண்டிஸ், 7.தசுன் ஷனகா (கேப்டன்), 8.வனிந்து ஹசரங்கா, 9.சமிகா கருணாரத்ன, 10.துஷ்மந்தா சமீரா, 11.அகிலா தனஞ்செயா.

டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
8 முறை சாம்பியனான இந்திய அணி ஏ”பிரிவில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் பெற்ற அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் ஜப்பான், நியூசிலாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
“பி” பிரிவில் கடந்த முறை வெள்ளிப் பதக்கம் பெற்ற பெல்ஜியம், வெண்கலப் பதக்கம் வென்ற ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் 2 பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது. 3-வது ஆட்டத்தில் ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
இந்திய அணி 4-வது ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் அர்ஜென்டினாவை இன்று எதிர்கொண்டது.
இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணிக்காக வருண்குமார் 43-வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத், 58-வது நிமிடத்திலும், ஹர்மன் பிளீசிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் பகுதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் கடைசி 2 நிமிடங்களில் இந்தியா 2- கோல் அடித்து முத்திரை பதித்தது.
அர்ஜென்டினா அணிக்காக கேசிலா 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த பதில் கோலால் 1-1 என்ற சமநிலை நீண்ட நேரமாக இருந்தது.கடைசி நிமிட கோல்களால்தான் வெற்றி கிடைத்தது.
இந்திய அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன் மூலம் கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது.
இந்த பிரிவில் ஆஸ்திரேலியாவும் 4 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி கடைசி இறுதி ஆட்டத்தில் ஜப்பானை நாளை எதிர்கொள்கிறது.
சென்னை:
8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தியது.
முதலில் விளையாடிய சேலம் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னை எடுக்க முடிந்தது. கேப்டன் டேரில் பெராரியோ அதிகபட்சமாக 22 பந்தில் 39 ரன் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். சோனுயாதவ் 3 விக்கெட்டும், ஹரிஷ் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 40 பந்தில் 52 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), சசிதேவ் 30 பந்தில் 42 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அடுத்து நெல்லை ராயல் கிங்சிடம் தோற்றது. அதே நேரத்தில் சேலம் அணி முதல் தோல்வியை தழுவியது.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 19 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.
முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய மதுரை அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திருச்சி அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. திருப்பூர் அணி ஒரு வெற்றி, ஒரு முடிவு இல்லை, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
ஒரு போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌன்-ஐ எதிர்கொண்டார். இதில் 4:1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சதீஷ் குமார் 30-27, 30-27, 28-29, 30-27, 30-26.
முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் தலா 10 புள்ளிகள் பெற்றார். 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றில் 3-வது நடுவர் தலா 9 புள்ளிகள் வழங்கினார்.
ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவ்-ஐ எதிர்கொள்கிறார்.
2-வது சுற்றில் தென்கொரியாவின் ஜின்யெக் ஓ-வை எதிர்கொண்டார். ஐந்து செட்கள் முடிவில் இருவரும் தலா ஐந்து செட் பாயிண்ட் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் ஷூட் ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அதானு தாஸ் 10 புள்ளிகள் பெற்றார். தென்கொரிய வீரர் 9 புள்ளிகள் பெற்றார்.
இதனால் 6-5 என்ற செட் பாயிண்ட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றார். 31-ந்தேதி நடைபெறும் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த டி. ஃப்ருகாவாவை எதிர்கொள்கிறார்.
இதனையடுத்து மற்றோரு அறிமுக வீரர் படிக்கல் களமிறங்கினார். கேப்டன் தவான் ஆட்டம் மந்தமாகவே இருந்தது. அவர் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் தனஜெயா பந்தில் போல்ட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அவிக்சா 11, சமராவிக்ரமா 8, சனகா 3, மெண்டீஸ் 2, மினோட் பனகா 36, ஹசரங்கா என வீரர்கள் அடுத்தடுத்த வெளியேறினர்.
17.2 ஓவரில் 105 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்து இருந்தது. இந்நிலையில் தனஜெயா-கருரத்னே ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். அந்த ஜோடி புவனேஸ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் 12 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அறிமுக பந்து வீச்சாளர் சக்காரியா அந்த ஓவரை வீசினார். கடைசி 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.






