என் மலர்
விளையாட்டு

சென்னை:-
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். திருச்சி 2-வது தோல்வியை தழுவியது.
10-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சிடம் தோற்றது. இன்றைய ஆட்டத்தில் சேலம் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்ளது.
சேலம் அணி கோவையுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் அந்த அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 3 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
மதுரை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
2-வது சுற்றில் அமெரிக்காவின் பிரேடி எல்லிசனை எதிர்கொண்டார். இந்த முறை பிரவீன் ஜாதவால் திறம்பட அம்புகளை தொடுக்க முடியவில்லை இதனால் 0-6 எனத் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

இன்று காலை 10.30 நிலவரப்படி ஜப்பான் 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 10 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்துள்ளது. சீனா 10 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 3-வது இடம் பிடித்துள்ளது.
ரஷ்யா 7 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6 தங்கம், 1 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா ஒரு வெள்ளியுடன் 41-வது இடத்தில் உள்ளது.
2-வது சுற்றில் இஸ்ரேலை சேர்ந்த இட்டே ஷன்னியை எதிர்கொண்டார். தருண்தீப் ராய்க்கு இஸ்ரேல் வீரர் இட்டே கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை இட்டே 28-24 என கைப்பற்றினார். 2-வது செட்டை தருண்தீப் ராய் 27-26 என கைப்பற்றினார்.
3-வது செட்டில் (27-27) இருவரும் சமமான புள்ளி பெற்று 1 பாயிண்ட் பெற்றனர். 4-வது செட்டை தருண்தீப் சாய் (28-27) என கைப்பற்றினார். இதனால் தருண்தீப் ராய் 5-3 என முன்னிலை பெற்றிருந்தார். 5-வது மற்றும் கடைசி செட்டை டிரா செய்தாலே 6-4 என செட் பாயிண்ட் பெற்று வெற்றி பெற்றுவிடலாம் என தருண்தீப் ராய் நினைத்த நிலையில், 5-வது செட்டை 27-28 என இழந்தார்.
இதனால் ஐந்து செட்கள் முடிவில் இருவரும் 5-5 என செட் பாயிண்ட்கள் பெற்று சமம் அடைந்தனர். இதனால் ஷூட்-ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இஸ்ரேல் வீரர் ஷன்னி முதல் அம்மை எய்து 10 புள்ளிகள் பெற்றார். ஆனால் தருண்தீப் ராயால் 9 புள்ளிகளே பெற முடிந்தது. இதனால் தருண்தீப் ராய் 5-6 என தோல்வியடைந்து வெளியேறினார்.






