search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் அணிகள் இன்று மோதல்

    சேலம் அணி கோவையுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் அந்த அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது.

    சென்னை:-

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். திருச்சி 2-வது தோல்வியை தழுவியது.

    10-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சிடம் தோற்றது. இன்றைய ஆட்டத்தில் சேலம் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்ளது.

    சேலம் அணி கோவையுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் அந்த அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 3 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    மதுரை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    Next Story
    ×