என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 142 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேலம்
Byமாலை மலர்28 July 2021 11:56 AM GMT (Updated: 28 July 2021 11:56 AM GMT)
கோபிநாத், விஜய் சங்கர், டேரில் பெராரியோ ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க, சேலம் அணி 143 ரன்கள் என்ற இலக்கை சேப்பாக் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20-யில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் அபிஷேக் 10 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ரவி கார்த்திக்கேயன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர் கோபிநாத் 24 பந்தில் 33 ரன்களும், விஜய் சங்கர் 28 பந்தில் 32 ரன்களும், கேப்டன் டேரில் பெராரியோ 22 பந்தில் 39 ரன்களும் சேர்த்தனர். இதனால் சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சோனு யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், ஹரிஷ் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் சேலம் அணியை வீழ்த்தினால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை ருசிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X