என் மலர்
புதுச்சேரி
காரைக்கால்:
காரைக்கால் அருகே நெடுங்காடு மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் நீலா (வயது38). இவரது கணவர் கடந்த ஆண்டு உடல் நலக் குறைவால் இறந்து விட்டார். நீலாவிற்கு சவுமியா (18), சரண்யா (16) சரண் (14) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
மூத்தமகள் சவுமியாவிடம், நெடுங்காடு அம்பேத்கார் நகரைச்சேர்ந்த காசிநாதன் மகன் ரிஷிஅமல் நாத் (18) நட்புரீதியில் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு ரிஷிஅமல்நாத், வீட்டில் அனைவரும் இருக்கும் போது, திடீரென நுழைந்து சவுமியாவிடம் பேசியுள்ளார்.
இதை பார்த்த நீலா, இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை என கேட்டார். இதனால் கோபம் அடைந்த ரிஷி அமல்நாத், நீலாவின் கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து, நீலாவின் குழந்தைகள் சவுமியா, சரண் ஆகியோர் ரிஷி அமல்நாத்தை தடுத்தபோது, இருவரையும் அடித்து, வீட்டினுள் தள்ளினார்.
மேலும் மற்றொரு மகள் சரண்யா கூச்சல் போடவே, பக்கத்து வீட்டில் வசிக்கும் நீலாவின் உறவினர் தனுஷ் (18) ஓடிச்சென்று, ரிஷி அமல் நாத்திடம் என்ன பிரச்சினை என கேட்டார். அவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதில் மூக்கில் காயம் ஏற்பட்ட தனுஷ், காரைக்கால் அரசு மருத்துவமனையிலும், மற்ற 3 பேரும் நெடுங்காடு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, நீலா நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ரிஷிஅமல்நாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், ரிஷி அமல் நாத் நெடுங்காடு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் மணல் மேட்டில் வசிக்கும் நண்பர் தனுஷை பார்க்கசென்றதாகவும், தனுஷுடன் பேசி கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட தாகவும், அப்போது, தனுஷ் கீழே கிடந்த மரசட்டத்தால் தன்னை தாக்கியதாகவும், தனுஷுக்கு ஆதரவாக, அருகில் நின்றிருந்த பிரகாஷ் ராஜ் (18), முருகானந்தம்(21) ஆகிய 2 பேரும் அதே மரச்சட்டத்தால் தன்னை தாக்கியதாகவும் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அந்த புகார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் கோவில் பத்து தென்றல் நகரில் வசிப்பவர் அய்யப்பன். பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அகல்யா (வயது 18) காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
வழக்கம் போல் அகல்யா கடந்த 4-ந்தேதி கல்லூரிக்கு சென்றார். அன்று மாலை வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த அய்யப்பன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அகல்யாவை காணவில்லை.
இதுகுறித்து அய்யப்பன் காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி அகல்யா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






