என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாரிசுதாரர்கள் தர்ணா போராட்டம் நடத்திய காட்சி.
    X
    வாரிசுதாரர்கள் தர்ணா போராட்டம் நடத்திய காட்சி.

    வாரிசுதாரர்கள் தர்ணா போராட்டம்

    பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு வாரிசுதாரர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை இறந்தோர் வாரிசுதாரர்கள், ஊழியர்கள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு  தர்ணா போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு பாலமுருகன் தலைமை வகித்தார். ரஞ்சித் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ  தலைவர் சேஷாச்சலம் சிறப்புரையாற்றினார். கூட்டமைப்பு தலைவர் பாலகுமார், பொதுச் செயலாளர் சம்பந்தம், பொதுப்பணித்துறை  ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் தனராசு, இளங்கோ வாழ்த்தி பேசினர். மணிகண்டன் நன்றி கூறினார். 

    கருணை அடிப்படையில் வவுச்சர்  ஊழியராக அமர்த்தப்பட்டவர்களை முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை முழு நேர  தினக்கூலி ஊழியராக மாற்றி ரூ.830 தினக்கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
    Next Story
    ×