என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான குழந்தைகள் லெவின், ரோகித்
குழியில் விழுந்து 2 குழந்தைகள் பலி - நில உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
வில்லியனூர் அருகே குழியில் விழுந்து 2 குழந்தைகள் பலியான சம்பவத்தில் நில உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேதராப்பட்டு:
வில்லியனூரை அடுத்துள்ள தமிழக பகுதியான பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமு என்கிற சுரேஷ். இவரது மனைவி இனிதா. இவர்களுக்கு லெவின் (4), ரோகித் (3) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
குழந்தைகள் இருவரும் பக்கத்து வீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் பெரம்பை மட்டுமல்லாது புதுவையிலும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அருண், ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், வசந்த ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் புதுவை உழவர்கரையை சேர்ந்த மோகன்குமார் பெரம்மையில் தனது நிலத்தில் வீடு கட்டுவதற்காக விழுப்புரம் ஆண்டியார்பாளையம் தோப்பு வீதியை சேர்ந்த ஆரோக்கிய பாபு மூலம் போர்வெல் அமைத்தது தெரிய வந்தது.
பணி முடிந்து சென்ற போது போர்வெல்லை மூடி சென்றதும், அதன் அருகே சேற்று கழிவுகள் கொட்ட தோண்டப்பட்ட குழியை மூடாமல் சென்றதும் அதில் குழந்தைகள் லெவின், ரோகித் ஆகியோர் விழுந்து பலியானதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக நில உரிமையாளர் மோகன் குமார், போர்வெல் அமைத்த ஆரோக்கிய பாபு ஆகியோரை ஆரோவில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் உரிய இழப்பீடு வழங்க கோரி குழந்தைகளின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
குழியில் விழுந்து 2 குழந்தைகள் பலியான சம்பவத்தால் பெரம்பை பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஆரோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






