search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் தயங்குவது ஏன்? - ராகுல்
    X

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் தயங்குவது ஏன்? - ராகுல்

    • ஒருவரை சிறியவர் மற்றும் பெரியவர் எனக் கருதும் இந்த மனநிலையை மாற்றுவது முக்கியம்.
    • நாடு முழுவதும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ நீதி யாத்திரை'யின்போது அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எல்லோரது மனதிலும் ஒரு கேள்வி எழுகிறது. பிரதமர் மோடி தன்னை பாராளுமன்றத்தில் 'ஓபிசி' என்று கூறுகிறார். பின்னர் நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழை 2 ஜாதிகள் மட்டுமே உள்ளன என்று சொல்லத் தொடங்கினார்.

    எனவே பிரதமர் முதலில் தெளிவான முடிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    ஒருவரை சிறியவர் மற்றும் பெரியவர் எனக் கருதும் இந்த மனநிலையை மாற்றுவது முக்கியம்.

    ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினராக இருந்தாலும் அவர்களை கணக்கிடாமல் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூகநீதியை வழங்க முடியாது.

    நாடு முழுவதும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு பிரதமர் ஏன் தயங்குகிறார்? இவ்வாறு கூறினார்.

    Next Story
    ×