என் மலர்tooltip icon

    இந்தியா

    பஹல்காம் போன்ற தாக்குதல்கள் நடக்கத்தான் செய்யும்... மக்கள் மீது பழியை போட்டு பேசிய மத்திய அமைச்சர்
    X

    பஹல்காம் போன்ற தாக்குதல்கள் நடக்கத்தான் செய்யும்... மக்கள் மீது பழியை போட்டு பேசிய மத்திய அமைச்சர்

    • மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மக்கள் மீது பழியைப் போட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய பியூஷ் கோயல், "140 கோடி இந்தியர்கள் தேசப் பற்றை உயரிய கடமையாக கருதும் வரை, பஹல்காம் தாக்குதல் போன்ற நாட்டை உலுக்கும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்" என்று தெரிவித்தார்.

    மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய அமைச்சர் மக்கள் மீது பழியை போட்டு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×