என் மலர்tooltip icon

    இந்தியா

    3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்
    X

    3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

    • அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவு
    • குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குகள் பதிவு

    பாராளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற்றது.

    அன்று உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இந்நிலையில், 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

    அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

    குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

    ஆண்கள் 67% பேரும், பெண்கள் 64% பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25% பேரும் வாக்களித்துள்ளனர்

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 85.45 சதவீதம்

    பீகார் 59.15 சதவீதம்

    சத்தீஸ்கர் 71.98 சதவீதம்

    கோவா 76.06 சதவீதம்

    குஜராத் 60.03 சதவீதம்

    கர்நாடகா 71.84 சதவீதம்

    மத்திய பிரதேசம் 66.75 சதவீதம்

    மகாராஷ்டிரா 63.55 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.55 சதவீதம்

    மேற்கு வங்காளம் 77.53 சதவீதம்

    Next Story
    ×