என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை கொடுத்து நாட்டின் காவலாளி திருடனாகி விட்டார் - ராகுல்
Byமாலை மலர்2 Jan 2019 2:49 PM GMT (Updated: 2 Jan 2019 2:49 PM GMT)
ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Modi #RahulGandhi
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியின்போது பதில் அளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-
ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என்று தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் எந்த அடிப்படையில் இதை குறிப்பிடுகிறது? என எங்களை பார்த்து பாஜகவினர் கேட்கிறார்கள்.
இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்னர் பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி ரபேல் பேரம் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது என்று தெரிவித்திருந்தார். 36 விமானங்களின் விலையான 58 ஆயிரம் கோடியை 36-ல் வகுத்துப் பார்த்தால் வரும் தொகைதான் 1600 கோடி ரூபாய்.
526 கோடி ரூபாயாக இருந்த ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் என்ன? உயர்த்தியவர்கள் யார்?
என்மீது தனிப்பட்ட வகையில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது என பிரதமர் ஒரு பேட்டியில் கூறுவதை நேற்று பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் எந்த உலகத்தில் வாழ்கிறார்? என்று எனக்கு புரியவில்லை.
ரபேல் பேரம் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறி முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பிரதமரை மிரட்டி வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாக மோடியுடன் நேருக்குநேராக விவாதிக்க நான் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறேன். ஆனால், என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இல்லை.
ரபேல் பேரத்தில் ஊழலே நடக்கவில்லை. இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடுவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #AnilAmbani #Chowkidaarchorhai #Modi #RahulGandhi #RafaleDeal
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியின்போது பதில் அளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-
ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என்று தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் எந்த அடிப்படையில் இதை குறிப்பிடுகிறது? என எங்களை பார்த்து பாஜகவினர் கேட்கிறார்கள்.
இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்னர் பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி ரபேல் பேரம் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது என்று தெரிவித்திருந்தார். 36 விமானங்களின் விலையான 58 ஆயிரம் கோடியை 36-ல் வகுத்துப் பார்த்தால் வரும் தொகைதான் 1600 கோடி ரூபாய்.
526 கோடி ரூபாயாக இருந்த ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் என்ன? உயர்த்தியவர்கள் யார்?
இதில் உண்மை நிலவரம் என்னவென்றால் ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார்.
என்மீது தனிப்பட்ட வகையில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது என பிரதமர் ஒரு பேட்டியில் கூறுவதை நேற்று பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் எந்த உலகத்தில் வாழ்கிறார்? என்று எனக்கு புரியவில்லை.
ரபேல் பேரம் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக கூறி முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பிரதமரை மிரட்டி வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாக மோடியுடன் நேருக்குநேராக விவாதிக்க நான் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறேன். ஆனால், என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இல்லை.
ரபேல் பேரத்தில் ஊழலே நடக்கவில்லை. இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடுவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #AnilAmbani #Chowkidaarchorhai #Modi #RahulGandhi #RafaleDeal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X