என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவனந்தபுரம் அருகே பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை
Byமாலை மலர்24 May 2018 6:40 AM GMT (Updated: 24 May 2018 6:40 AM GMT)
திருவனந்தபுரம் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை செய்து கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே உள்ள சாலக்குடி கண்டன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் லைஜோ (வயது 28). இவரது மனைவி சவுமியா (வயது 37), இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான்.
லைஜோ திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சவுமியா சாலக்குடி பகுதியில் ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர்கள் வீடு பகல் வரை பூட்டியே கிடந்தது. நீண்ட நேரமாக அவர்கள் யாரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் வீட்டு கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர்களது மகன் மட்டும் அழுது கொண்டிருந்தார். உடனே அவர்களது உறவினர்கள் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டின் உள்ளே ஒரு அறையில் சவுமியா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் லைஜோவை தேடினார்கள். அப்போது அவரது அறை கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
கதவை தட்டியும் அவர் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது, லைஜோ ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லைஜோ சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி சவுமியாவை கணவர் லைஜோவே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் அவரும் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த கொலைக்கான முழு விபரமும் லைஜோவுக்கு சுய நினைவு திரும்பிய பிறகுதான் தெரிய வரும். #Tamilnews
திருவனந்தபுரம் அருகே உள்ள சாலக்குடி கண்டன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் லைஜோ (வயது 28). இவரது மனைவி சவுமியா (வயது 37), இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான்.
லைஜோ திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சவுமியா சாலக்குடி பகுதியில் ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர்கள் வீடு பகல் வரை பூட்டியே கிடந்தது. நீண்ட நேரமாக அவர்கள் யாரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் வீட்டு கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர்களது மகன் மட்டும் அழுது கொண்டிருந்தார். உடனே அவர்களது உறவினர்கள் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டின் உள்ளே ஒரு அறையில் சவுமியா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் லைஜோவை தேடினார்கள். அப்போது அவரது அறை கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
கதவை தட்டியும் அவர் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது, லைஜோ ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லைஜோ சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி சவுமியாவை கணவர் லைஜோவே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் அவரும் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த கொலைக்கான முழு விபரமும் லைஜோவுக்கு சுய நினைவு திரும்பிய பிறகுதான் தெரிய வரும். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X