search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈவிகேஎஸ் இளங்கோவன்
    X
    ஈவிகேஎஸ் இளங்கோவன்

    காங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

    காங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சேலத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட காமராஜ் அறக்கட்டளை சார்பில் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா சேலம் தமிழ்சங்கத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்று நிர்வாகிகள் தொண்டர்கள் விரும்புகின்றனர். அப்படி இல்லாவிட்டால் சோனியாக காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவராவது கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.

    ராகுல் காந்தி

    காமராஜரை போன்று ஒரு சிறந்த முதல்-அமைச்சர் இனி மேல் வர முடியாது. விவசாயிகள் நலனுக்காகவும், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல அணைகளை கட்டியவர் காமராஜர். தமிழகத்தில் தற்போது லஞ்சம் வாங்குவது அதிகரித்து விட்டது. காமராஜர் பெயரை சொல்லாமல் யாரும் ஆட்சியை நடத்த முடியாது. காமராஜரை கொல்ல முயன்றவர்கள் அவரின் பெயரை உச்சரிக்க தகுதியில்லாதவர்கள். காங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மோசடி செய்து தேர்தலில் மோடி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் செய்த பல திட்டங்களால் தான் தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறோம். உருக்காலையை ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில்வேயையும் தனியார் மயமாக்கி விடுவார்கள். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×