என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
சேலம்:
சேலம் மாவட்ட காமராஜ் அறக்கட்டளை சார்பில் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா சேலம் தமிழ்சங்கத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார்.
விழாவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்று நிர்வாகிகள் தொண்டர்கள் விரும்புகின்றனர். அப்படி இல்லாவிட்டால் சோனியாக காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவராவது கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.
காமராஜரை போன்று ஒரு சிறந்த முதல்-அமைச்சர் இனி மேல் வர முடியாது. விவசாயிகள் நலனுக்காகவும், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல அணைகளை கட்டியவர் காமராஜர். தமிழகத்தில் தற்போது லஞ்சம் வாங்குவது அதிகரித்து விட்டது. காமராஜர் பெயரை சொல்லாமல் யாரும் ஆட்சியை நடத்த முடியாது. காமராஜரை கொல்ல முயன்றவர்கள் அவரின் பெயரை உச்சரிக்க தகுதியில்லாதவர்கள். காங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோசடி செய்து தேர்தலில் மோடி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் செய்த பல திட்டங்களால் தான் தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறோம். உருக்காலையை ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில்வேயையும் தனியார் மயமாக்கி விடுவார்கள். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்