என் மலர்
வேலூர்
வேலூர்:
கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பதவிக்கு நேர்காணல் இன்று வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
22 பதவிகளுக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். நேர்காணல் உதவி ஆணையர் வெங்கட்ராமன் மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வருகிற 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 400 பேருக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை 400 பேருக்கும் என 2 வேளையாக நடைபெற்றது.
சான்றிதழ் சரிபார்ப்பு, சைக்கிள் ஓட்டுதல், மாடுகளை கையாளுதல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தப் பதவிக்கு 10-ம் வகுப்பு அடிப்படைத் தகுதியாகும். ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள். அதிலும், முதுநிலைப் பட்டதாரிகள், எம்.பி. ஏ., என்ஜினீயரிங் பட்டதாரிகள் போன்றவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர்.
மாடுகளை கையாளும் தேர்வில் டிப்-டாப் உடையணிந்த ஏராளமான பட்டதாரிகள் கலந்துகொண்டனர். டிப்டாப் உடையில் மாடுகளை கட்டியும் லாவகமாக ஓட்டியும் காண்பித்தனர்.மேலும் அவர்கள் சைக்கிள் ஓட்டியும் காண்பித்தனர்.
இதேபோல ஏராளமான இளம்பெண்களும் இதில் கலந்து கொண்டனர். அவர்களும் மாடுகளை கையாண்டும், சைக்கிள் ஓட்டியும் காண்பித்தனர்.
வேலூர்:
பெங்களூரிலிருந்து வேலூர் வழியாக சென்னைக்கு குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வர படுகின்றன இதனை தடுக்க சுங்கச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 35 மூட்டைகளில் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.
இந்த குட்கா பொருட்கள் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது வேன் டிரைவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாவாய் சிங் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.
மேலும் குட்கா பொருட்களை வேனுடன் பறிமுதல் செய்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்தனர். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் சுமார் 1000 கிலோ குட்கா போதைப் போதைப் பொருட்கள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பறிமுதல் செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






