என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூரில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்கள் 11 பேர் கைது

    வேலூரில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் கலாஸ் பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22). இவர் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் பானி பூரி சாப்பிட சென்றார். சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்திருந்தனர்.

    அப்போது முகமது, விக்னேஷ் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் முகமது மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து விக்னேஷை தாக்கியுள்ளனர்.

     விக்னேஷ் இதுகுறித்து அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் காட் வின் (20) ஆகாஷ் (19)மற்றும் 3 சிறுவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முகமது மற்றும் அவரது நண்பர்களை தாக்கினர்.

    பானி பூரி சாப்பிட வந்த இடத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு வாலிபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முகமது அவரது நண்பர்கள் மகபூப்பாஷா, அமீர், பையதுல்லா, பைரோஸ் மற்றும் விக்னேஷ், காட்வின் ஆகாஷ் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 11 பேரை கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×