என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முழுநேர ரேசன் கடை கேட்டு பொதுமக்கள் மனு அளித்த காட்சி.
    X
    முழுநேர ரேசன் கடை கேட்டு பொதுமக்கள் மனு அளித்த காட்சி.

    வேலூர் சாஸ்திரி நகரில் முழுநேர ரேசன் கடை கேட்டு பொதுமக்கள் மனு

    வேலூர் சாஸ்திரி நகரில் முழுநேர ரேசன் கடை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
    வேலூர்:

    வேலூர் கூட்டுறவு துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி  மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மனு அளித்தனர். 

    அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் சாஸ்திரி நகரில் பகுதி நேர ரேசன் கடை இயங்கி வருகிறது. இதில் 700-&க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர்.செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டுமே ரேசன் கடை திறக்கப்படுகிறது. 

    இதனால் 2 நாட்களிலும் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் அதிக நேரம் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    பலர் கூலித் தொழிலாளர் களாக இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் வந்து பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படு கின்றனர்.

    பகுதி நேரமாக செயல்படும் இந்த கடையை அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் முழு நேர ரேசன் கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
    Next Story
    ×