என் மலர்tooltip icon

    வேலூர்

    குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கவுண்டன்ய ஆற்றில் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    குடியாத்தம் தாலுகா கவுண்டன்ய ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு மாதத்துக்கு மேலாக ஆற்றில் பெரு வெள்ளம் ஓடியது.

    இதனால் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. எனவே அங்கு குடியிருந்தவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த 1,282 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

    இந்தநிலையில் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று பகுதியில் சிறிய வியாபாரிகள் பொம்மை கடைகள், விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பொழுது போக்கிற்கான ரங்கராட்டினம் மற்றும் இதர கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வந்தால் மீண்டும் தொடர் மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும், மண்வளம் குறித்த நிலைமை அறியாத நிலையில் ரங்கராட்டினம் போன்றவற்றை ஆற்றுப்பகுதியில் அமைத்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று புறம்போக்கில் எவ்வித கடைகள் அமைப்பது முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது என கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

    ஆற்றுபகுதயில் கடை வைக்க அனுமதிக்க வலியுறுத்தி விழாக்குழுவினர் மற்றும் வியாபாரிகள் கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.

    அவர் இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதனைதொடர்ந்து குடியாத்தம் கெங்கை அம்மன் திருவிழா வின்போது கவுண்டன்யா ஆற்றுப் பகுதியில் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் எந்தவித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல கெங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெறும் என கதிர் ஆனந்த் எம்.பி.தெரிவித்துள்ளார். இதனால் குடியாத்தம் திருவிழா தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

    எந்தவித மாற்றமும் இல்லாமல் குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழா வழக்கம்போல் நடைபெற ஏற்பாடு செய்த கதிர் ஆனந்த் எம்.பி.க்கு குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
    கே.வி.குப்பம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியில் நேற்று இரவு சூறைகாற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால்அப்பகுதியில் சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

    இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி சாந்தி (50) சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை தனது கையால் அகற்ற முயன்றுள்ளார். 

    அப்போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததால் மின் சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடடித்து பரிதாபமாக இறந்தார். இதை கண்ட கிராம மக்கள் கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூரில் 75 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 75 வாகனங்க ளில் இருந்து தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான் களை வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தனியார் பேருந்துகளில் பொருத் தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்களை இரு நாள்களுக் அவர் மேலும் கூறியது: குள் அகற்றிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வாகனங்களில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையிலும் காற்று ஒலிப்பான்கள் பொருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடையை மீறி பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்களிலும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு தடையை மீறி வாகனங்களில் பொருத்தப் னர். பட்டுள்ள காற்று ஒலிப்பான்களை அகற்றிட அரசு உத் தரவிட்டுள்ளது.

    ளப்பட்டு வரும் இந்த ஆய்வில், இதுவரை 75 வாகனங் களில் இருந்து காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய் யப்பட்டிருப்பதாக வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தெரிவித்தார்.

    தனியார் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை அதிகளவில் பொருத்தியுள்ளனர். இதையடுத்து, தனி யார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி காற்று ஒலிப்பான்களை அகற்றிட அறிவுறுத்தப் பட்டது. இரு நாள்கள் அவகாசத்தில் அனைத்துப் பேருந்துகளிலும் காற்று ஒலிப்பான்களை அகற்றிக் கொள்வதாக அவர்களும் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இரு சக்கர வாகனங்களில் உல்ஃப் எனப் படும் காற்று ஒலிப்பான்களை இளைஞர்கள் பயன்ப டுத்தி வருகின்றனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய் யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தி னால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அதன்பேரில், வேலூர் மாவட்டம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் காற்று ஒலிப் பான்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் கடந்த சனிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாநகரம், குடியாத்தம், பள்ளிகொண்டா சுங் கச்சாவடி உள்பட பல்வேறு இடங்களில் மேற்கொள் றார்.
    வேலூரில் மதுகுடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவனை மனைவியே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 60). லாரி செட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (48). வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் திருமணம் ஆகி சென்றுவிட்டார். மற்றொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் குமரவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு பொழுதை கழித்தார். தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் அவர் கோமதியிடம் தகராறு செய்து வந்தார்.

    நேற்று இரவு குமரவேல் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    ஒரு கட்டத்தில் கணவன் மனைவி சண்டை முற்றியது. இதில் ஆத்திரமடைந்த குமரவேல் கத்தியை எடுத்து கோமதியை வெட்டினார். அவரது முகம், நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. உயிர் தப்பி ஓடிய கோமதி கத்தியை பிடுங்கி கணவன் என்று பாராமல் குமரவேலை எதிர்த்து வெட்டி சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    வெட்டுக்காயத்தில் படுகாயமடைந்த கோமதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குமரவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோமதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமரவேல் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்தார். கோமதி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றினார். மதுப்பழக்கத்தால் குமரவேல் தகராறில் ஈடுபட்டதால் அவர்களது குடும்பத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
    வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    கொரோனா பரவலை தடுக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது.

    தற்போதைய சூழலில் முதலாவது தவணையிலும், 2வது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை மட்டுமே செலுத்திக்கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதி வழங்கியுள்ளது.

    அதாவது கோவேக்சின் செலுத்தியவர்கள் அதே ஊசியையும்.கோவிஷீல்டு செலுத்தியவர்கள் அதே ஊசியை 2வது, 3வது தவணை செலுத்தி வருகின்றனர்.

    கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொருத்தவரை சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட அடினோ வைரஸ் மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

    கோவேக்சின் தடுப்பூசி செயலிழந்த கொரோனா வைரஸ் தீ நுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

    அதில், முதல் தவணையில் ஒரு வகை தடுப்பூசியையும், 2வது தவணையில் மற்றொரு வகை தடுப்பூசியும் செலுத்தினால் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாகுமா என்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

    வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

    ஒரே நபருக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இருவேறு கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்துவது தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    அவர்கள் 200 தன்னார்வலர்களிடம் மாறி மாறி தடுப்பூசிகளை செலுத்தி ஆராய்ச்சி செய்தனர்.

    இதில் தடுப்பூசிகளை கலப்பதால் எந்த பயனும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒரே வகையான தடுப்பூசியை செலுத்தும் போது அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. மாறி, மாறி தடுப்பூசிகளை செலுத்தும் போது அதில் போதிய ஊக்கம் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.

    நோய் தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியில் கலந்து செலுத்துவது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை. இதனால் இந்தியாவில் ஒரே வகையான தடுப்பூசி செலுத்த மட்டுமே தற்போது அனுமதித்து வருகின்றனர்.

    மேலும் பல ஆராய்ச்சி முடிவு எடுக்க இந்திய அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்... வருகிற 15-ந்தேதி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 76,956 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 8,237 மாணவர்கள் 8,720 மாணவிகள் உள்பட 16,957 பேர் தேர்வு எழுதினர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 120 பள்ளிகளை சேர்ந்த 14,320 மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 56 மையங்களில் இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு நடந்தது. இதில் 14,699 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 257 பள்ளிகளில் படிக்கும் 15,459 மாணவர்கள் 15,521 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 980 பேர் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதினர்.

    அரசு பொதுத் தேர்வுகளை முன்னிட்டு நிலையான படை உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

    இது தவிர மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலர் தலைமையில் தேர்வு கண்காணிப்பு குழுவினர் அரசு பொதுத் தேர்வுகளை கண்காணித்து வருகின்றனர்.

    அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை விட்டு அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் தண்ணீர் பாட்டில், பேனா, ஹால்டிக்கெட் கொண்டு செல்ல அனுமதிக்கப் பட்டனர். எலெக்ட்ரானிக், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்க படவில்லை.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது, அதேபோல் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் சனிக்கிழமையும், சிரசு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

    இவ்விழாவில் செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேற்று இரவு ஆய்வு செய்தார். குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் செல்லும் பாதைகள், அம்மன் சிரசு ஊர்வலமாக செல்லும் பாதைகளை ஆய்வு செய்தார். 

    மேலும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் காலையில் சிரசு புறப்படும் முத்தாலம்மன் கோவில் வரை சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், மணிகண்டன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்தில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காவல்துறையினரிடம் ஆலோசனை நடத்தினார்.

    நிருபர்களிடம் பேசிய டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறியதாவது நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம், கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் மற்றும் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்படும். 

    கெங்கையம்மன் சிரசு நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் அன்று பவுர்ணமி நாள் என்பதாலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழா என்பதாலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பு பணியில் வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

     இத்திருவிழாவில் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசிக்கவும், கோவிலுக்கு வந்து செல்லவும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் அதற்காக போலீஸ் சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
    காங்கேயநல்லூரில் ஜல்லிக்கற்கள் கொட்டி ஒரு மாதமாகியும் சாலை போடாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
    வேலூர்:

    காட்பாடி காங்கேயநல்லூர் 10-வது வார்டு விநாயகர் கோவில் தெருவில் சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனிடையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    அப்போது தெருவை சமன்செய்து ஜல்லி கற்களை கொட்டினர். உடனடியாக சாலை வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு எதிராக தெருவில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் அப்படியே பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

    இதனால் வாகனங்கள் பொதுமக்கள் தெருவில் நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர்.இவர்கள் வாகனங்களில் செல்ல முடியவில்லை.

    ஜல்லி கொட்டாமல் இருந்தபோதே தெருவில் ஓரளவு நடமாட முடிந்தது. ஆனால் இப்போது சாலை அமைக்கும் பணியை தொடங்கி விட்டு கிடப்பில் போட்டுள்ளனர்.

    காங்கேயநல்லூரில் இதே போல மேலும் சில தெருக்களில் ஜல்லி கொட்டப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாலைகள் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர்.

    இதுபோன்ற ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் குழந்தைகள் பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. உடனடியாக தெருக்களில் சாலை அமைக்க வேண்டும் அல்லது கொட்டப்பட்ட ஜல்லி கற்களை தயவுசெய்து அப்புறப்படுத்தி விடுங்கள் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
    வேலூர் கோட்டை அகழியை சுற்றிலும் 94 இடங்களில் ராட்சத விளக்குகள் பொருத்தப்படுகிறது.
    வேலூர்:

    வேலூர் கோட்டை 113 ஏக்கர் பரப்பளவில் அகண்டு விரிந்து பல்வேறு வரலாற்றுச் சின்னங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கோட்டையை பார்வையிட வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

    10 ஆண்டுகளுக்கு முன் வேலுார் கலெக்டராக இருந்த அஜய் யாதவ் கோட்டையை சுற்றிலும் விஜயநகர பேரரசு காலத்தை விளக்கும் வகையில் கோட்டை கொத்தளங்களில் அந்தகால சிப்பாய்கள் காவல் காப்பது போன்ற பொம்மைகளை நிறுவி, அதை நோக்கி கோட்டை அகழி கரையில் ஸ்பாட் லைட்டுகளை வைத்தார். 

    இதனால் கோட்டை இரவு நேரத்தில் ஜொலித்தது. இதற்காக காற்றிலிருந்து மின்சாரம் எடுக்க தனி ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டது. அப்போது இதுபரபரப்பாக பேசப்பட்டது.

    கோட்டையும் வண்ண விளக்குகளால் இரவு நேரத்தில் ஜொலித்தது. பலருடைய பாராட்டையும் பெற்றது. பின்னர் வழக்கம் போல பராமரிப்பு மறைந்து போனதால் அன்று வைக்கப்பட்ட பொம்மைகள் காற்று, மழையில் சிதைந்து போனது.

    இந்நிலையில், வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூரை அழகாக்கும் பணிகள் தொடங்கியது. அதில் வேலூர் கோட்டையின் உட்பகுதியில் மார்பிள் நடைபாதைகள், அந்த காலத்து விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால், கோட்டை உட்பகுதிகள் அழகு பெற்றது. 

    அதேபோன்று ஆங்கிலேயேர்களால் பயன்படுத்தப்பட்ட கட்டடங்கள் ஆட்கள் இல்லாமல் சிதைந்து போய் கிடக்கிறது. இதையும் மராமத்து பார்க்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார். அந்த பணிகளும் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், கோட்டையின் வெளிப்புற அழகை மக்கள் எளிதாக இரவிலும் கண்டுகளிக்க வசதியாக கோட்டையை சுற்றியும் அகழிக்கரைகளில் இருந்து ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள் இப்போது தொடங்கியிருக்கிறது.

    இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அகழிக்கரைகளில் கோட்டையை சுற்றிலும் 94 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தூண்கள் அமைத்து அதிகளவு ஒளி தரும் எல்இடி விளக்குகள் அமைக்கப்படுகிறது.

    இதனால், இரவு நேரத்திலும் கோட்டையை அழகாக கண்டுகளிக்கலாம். இப்பணிகள் ஓரிரு மாதங்களில் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் ஷவர்மா விற்பனை கடைகளில் 4 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    கேரளாவில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட உணவை அம்மாநில சுகாதாரத் துறையினர் பரிசோதித்ததில் ‘ஷிகெல்லா’ என்ற பாக்டீரியா இருந்ததும், அப்பெண் உயிரிழப்புக்கு அந்த பாக்டீரியா காரணமாக இருக்கலாம் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, தருமபுரி, தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதிகளில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வேலூர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வேலூர் மாநகர் 21 இடங்களிலும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 40 இடங்களில் ஷவர்மா கடைகள் உள்ளன. அனைத்து கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

    இதில் 6 கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் தயாரிப்பு கூடங்கள் இருந்தன. அந்த விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.மேலும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல 4 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷவர்மா உணவகங்களில் நன்றாக வேக வைத்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய வேண்டும். அவசர அவசரமாக பாதி சிக்கன் வெந்த நிலையில் கொடுக்கும் போது அவை விஷமாக மாறிவிடும்.

    குழந்தைகள் முதியவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நன்றாக வேக வைத்த ஷவர்மா மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சாந்தனுக்கு 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 

    நேற்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சாந்தனுக்கு ரத்தம் சர்க்கரை அளவு ஈசிஜி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. சோதனை முடிந்த பிறகு மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இன்று 2-வது நாளாக சாந்தனுக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. 

    இதற்காக அவரை காலை 10 மணிக்கு வேலூர் ஜெயிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பல் பரிசோதனை செய்யப்பட்டது. 

    மேலும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. 2 மணி நேர சோதனைக்குப் பிறகு சாந்தன் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    வேலூரில் இருந்து குடியாத்தம் கெங்கையம்மன், பொற்கொடியம்மன் கோவில் திருவிழாவுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    வேலூர்:

    குடியாத்தம் கெங்கை யம்மன், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி 75 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்த கோவில்க ளில் குடியாத்தம் கெங்கை யம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் சிரசு திருவிழா வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதேபோன்று அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் புஷ்பரத ஏரி திருவிழா நாளை மறுதினம் (புதன்கிழமை) நடைபெறுகிறது. 

    கொரோனா தொற்று பரவல் காரணமாக குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா மற்றும் வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் புஷ்பரத ஏரி திருவிழாவிற்கு கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தற்போது வேலூர் மாவட்டத்தில் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    எனவே 2 கோவில் திருவிழாவிற்கும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா, வல்லண்டராமம் பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர், குடியாத்தத்தில் இருந்து வல்லண்டராமத்துக்கு தலா 20 பஸ்கள் என்று மொத்தம் 40 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

     இதையொட்டி வேலங்காட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. பஸ்நிலையம் அமையும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதேபோன்று வேலூர்-குடியாத்தம் வழித்தடத்தில் இருமார்க்கமாக தற்போது 30 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சிரசு திருவிழாவையொட்டி அந்த வழித்தடத்தில் கூடுதலாக 25 சிறப்பு அரசு பஸ்களும், ஆம்பூரில் இருந்து குடியாத்தத்திற்கு 10 சிறப்பு பஸ்களும் என்று 35 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×