என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சங்கீதவாடி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    ஊராட்சி செயலாளராக சுபா பணிதள பொறுப் பாளராக சீதா பணிபுரிந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 600  பேர் மகாத்ம காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையில் 2 பிரிவுகளாக பணிபுரிந்து வருகின்றனர். 

    மேலும் கடந்த 2 நாட்களாக பணிதள பொறுப்பாளர் சீதா 600நபர்களிடம் கட்டாயமாக 100ரூபாய் அலுவலகத்திற்கு தர வேண்டும் மறுக்கும் நபர்களுக்கு வேலை வழங்க முடியாது என்று வட்டார திட்ட அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளதாக கூறி சுமார் 450க்கும் மேற்பட்டவர்களிடம் தலா 100 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

    இது சம்மந்தமாக 6வது வார்டு உறுப்பினர் உமா ரங்கநாதன் என்பவர் சம்பவம் குறித்து கேட்டதற்கு ஊராட்சி செயலர் மற்றும் பணிதள பொறுப்பாளர் ஆகியோர் சரிவர பதிலக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர் மற்றும் 100 நாள் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆரணி ஓன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார திட்ட வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் புகார் மனு அளித்தனர். 

    புகாரை பெற்று கொண்ட வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் சீனிவாசன் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். உரிய நடவடிக்கை மேற் கொள்ள வில்லையென்றால் கலெக்டரிடம் புகார் அளிப்பதாக 100 நாள் பணியாளர்கள் தெரிவித்தனர்.
    மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை தொடங்கியது.
    திருவண்ணாமலை:

    மாசி மாதம் அமாவாசைக்கு முன் வரக்கூடிய திரயோதசி மற்றும் சதுர்த்தி திதிகள் சந்திக்கும் நாளில் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் ?என்ற போட்டி ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து பிரம்மா சிவனின் முடியை காண்பதற்கும், விஷ்ணு அவரது பாதத்தை காண்பதற்கும் சென்றனர். ஆனால் இருவரும் தங்களது முயற்சியில் தோல்வி அடைந்தனர்.அவர்களால் சிவனின் அடியையும் முடியையும் காண இயலவில்லை.

    பின்னர் சிவன் இருவரின் அகந்தையையும் அழித்து லிங்கோத்பவராகவும், ஜோதி வடிவமாகவும் காட்சி அளித்தார். இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா இன்று இரவு நடைபெறுகிறது. 

    இதனை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று காலை அருணாச்சலேஸ்வரர் &உண்ணாமலையம்மன் அம்மன் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதிகாலை 5 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. தொடர்ந்து மாலை 2 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. முதல் கால பூஜை இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் கால யாகபூஜை 11.30 மணிக்கு நடக்கிறது. 

    அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் மூலவர் சன்னதி பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.பின்னர் அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், 4.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடக்கிறது.

    மேலும் கோவில் வளாகத்தில் பன்னிரு திருமுறை இசை நிகழ்ச்சி, நாதஸ்வர இசை நிகழ்ச்சி, பரதநாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீகச் சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது, லிங்கோத்பவரை தரிசனம் செய்ய கட்டளைதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இரவு கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் லட்ச தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இன்று சிவராத்திரி தினம் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலை முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று இரவு அஷ்டலிங்க சன்னதிகளிலும், அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றது. அதனை காண பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். 

    சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் இன்று களைகட்டியுள்ளது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நாளை இரவு முதல் விடிய விடிய நடக்கிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நாளை  (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறுகிறது. 

    விழாவை முன்னிட்டு விடிய விடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    மாலை 6 மணி முதல் காலை 4 மணி வரை 4 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
    அப்போது நந்தி மற்றும் அருணாசலேஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். 

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபராதனை நடைபெறும்.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்படும்.

    ஒவ்வொரு கால பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். நள்ளிரவு அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்கள் மற்றும் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சிவராத்திரி அன்று தரிசனம் செய்தால் அது ஓருஆண்டு தரிசனம் செய்த பலன்களை வழங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    இதனை பெண்களுக்கு ஒன்பது நாட்கள் நவராத்திரி ஆண்களுக்கு ஒரு நாள் சிவராத்திரி என்றும் சொல்வார்கள். சிவபெருமான் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகளுக்கும் அருள்பாலிக்க கூடியவர். அவரை அறியாமல் வழிபட்ட உயிரினங்களும் முக்தி அடைந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

    எனவே நாளை சிவராத்திரி அன்று சிவனை தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோம்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவராத்திரி வழிபாடுகளில் பக்தர்கள் சரியாக பங்கேற்க முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு சிவராத்திரி விழாவில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பெரணமல்லூர் அருகே மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள கொருகாத்தூரில் போலீஸ் சப்-&இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

     அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை மடக்கி சோதனை செய்ததில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது. 

    இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்து மாட்டு வண்டி ஓட்டி வந்தவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே புதுப்பெண் தற்கொலை குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள வேடந்தவாடி வாநத்தம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 38) இவரது மனைவி சண்முகசுந்தரி (32) இவர்களுக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் வேதனையடைந்த சண்முகசுந்தரி கடந்த 22&ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

    அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். 

    இதுபற்றிய புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுப்பெண் திருமணமான 10 மாதங்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. வெற்றிவேலும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    செய்யாறில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    செய்யாறு:

    செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் எம்.எல்.ஏ. ஜோதி போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்களும் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் வட்டார மருத்துவர் ஷர்மிளா மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 80). கூலி தொழிலாளி. 

    இவருக்கு உடல்நல குறைவால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனளிக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளானார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனுசாமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். 

    இதையடுத்து அவரை மீட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார்.
     
    இதுகுறித்து முனுசாமியின் மகன் ரவி சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உக்ரைனில் தவித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    உக்ரைன், ரஷியா போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்புக்கு சென்ற இந்திய மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

    அவர்களை  மீட்கும் முயற்சியில் இந்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. 
    முதற்கட்டமாக  உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொது) தொடர்பு அலுவலராக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் அலுவலராக நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 

    உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களின் விவரத்தை அவர் சேகரித்து வருகிறார். 

    இது தொடர்பாக கணேஷ் கூறியிருப்பதாவது:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உக்ரைன் நாட்டில் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    இந்த விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    மேலும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள வர்களின் விவரங்களை 94450-08158 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பினால் பலர் உயிரிழந்தனர்.

    தற்போது கொரோனா 3-வது அலை அச்சம் கொடுக்கும் வகையில் அதிகரித்த போதிலும் மிக குறுகிய காலத்தில் பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். 

    திருவண்ணாமலையில் கொரோனா பரவலை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நேற்று முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

    இனிமேல் கொரோனா போன்ற வைரஸ் பரவல் இல்லாமல் இருக்கவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உக்ரைன் நாட்டில் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    உக்ரைன், ரஷியா போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்புக்கு சென்ற இந்திய மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அவர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.

    முதற்கட்டமாக உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொது) தொடர்பு அலுவலராக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் அலுவலராக நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களின் விவரத்தை அவர் சேகரித்து வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உக்ரைன் நாட்டில் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களின் விவரங்களை 9445008158 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

    ஆரணியில் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் வாக்காளர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 

    இதனால் விரக்தியடைந்த வேட்பாளரின் குடும்பத்தினர் வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தாங்கள் வழங்கிய பணம் மற்றும் பரிசுப் பொருட்களை திருப்பி தரும்படி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கும், வேட்பாளரின் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேட்பாளரின் தரப்பில் வாக்காளர்களை ஒருமையில் பேசி திட்டியதாகவும் கூறப்படுகிறது. 

     இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சிலர் வேட்பாளர் சார்பில் வழங்கப்பட்ட பணம் மற்றும் பரிசு பொருட்களை திரும்ப கொடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆரணி டவுன் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 

    இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரணி அருகே குளத்தை தனியாருக்கு குத்தகை வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தில் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் மையப்பகுதியில் வண்ணார் குளம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பொதுமக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வண்ணார் குளத்தை குடிமராமத்து பணியில் சுமார் ஒரு லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணியை தற்போது பாதியில் நிறுத்திவிட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் தன்னிச்சையாக கிராமத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள குளத்தை தனியாருக்கு மீன் குத்தகைக்கு விட்டுள்ளனர்.

    இதனைக் கண்டித்து 50&க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து குளத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக தனியாருக்கு தாரை வார்த்த குளத்தை மீண்டும் கிராம பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×