என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்த காட்சி.
    X
    ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்த காட்சி.

    ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி

    ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சங்கீதவாடி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    ஊராட்சி செயலாளராக சுபா பணிதள பொறுப் பாளராக சீதா பணிபுரிந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 600  பேர் மகாத்ம காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையில் 2 பிரிவுகளாக பணிபுரிந்து வருகின்றனர். 

    மேலும் கடந்த 2 நாட்களாக பணிதள பொறுப்பாளர் சீதா 600நபர்களிடம் கட்டாயமாக 100ரூபாய் அலுவலகத்திற்கு தர வேண்டும் மறுக்கும் நபர்களுக்கு வேலை வழங்க முடியாது என்று வட்டார திட்ட அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளதாக கூறி சுமார் 450க்கும் மேற்பட்டவர்களிடம் தலா 100 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

    இது சம்மந்தமாக 6வது வார்டு உறுப்பினர் உமா ரங்கநாதன் என்பவர் சம்பவம் குறித்து கேட்டதற்கு ஊராட்சி செயலர் மற்றும் பணிதள பொறுப்பாளர் ஆகியோர் சரிவர பதிலக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர் மற்றும் 100 நாள் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆரணி ஓன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார திட்ட வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் புகார் மனு அளித்தனர். 

    புகாரை பெற்று கொண்ட வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் சீனிவாசன் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். உரிய நடவடிக்கை மேற் கொள்ள வில்லையென்றால் கலெக்டரிடம் புகார் அளிப்பதாக 100 நாள் பணியாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×