என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் இறந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பெண்ணுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. பெண் பக்தர்கள் வேப்பிலையை அணிந்து கோவிலை சுற்றி வந்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூரை சேர்ந்த காந்திமதி (வயது 58) என்பவர் வேப்பஞ்சேலை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.

    அவர் கோவிலை சுற்றி வலம் வந்த போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் இறந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது.
    • ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பிரபல தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்திற்கு அதிகாலை 4 மணியளவில் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தின் மேல் பகுதியை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது திடீரென எச்சரிக்கை மணி அடித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்து வளசரவாக்கம் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தப்பி சென்ற மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரியான நேரத்தில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஏ.டி.எம்.மில் இருந்த பல லட்ச ரூபாய் பணம் தப்பியது.

    • கொள்ளையர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்துள்ளது கேமிராவில் பதிவாகி உள்ளது.
    • பானுநகரில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அம்பத்தூர் பானுநகரில் போலீஸ் ரோந்து சரிவர இல்லாததால் திருட்டு சம்பவங்கள் மீண்டும் அரங்கேறி வருகிறது. நேற்றிரவு கடப்பாரையுடன் வந்த 2 கொள்ளையர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்துள்ளனர்.

    பானுநகர் முதல் மெயின் ரோட்டில் சரண்யா ஸ்டோர் என்ற மளிகை கடை நடத்தி வருபவர் காளிராஜன்.இவரது கடையின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த மளிகை பொருட்கள் மட்டுமின்றி கடையில் இருந்த பணத்தையும் எடுத்து சென்று விட்டனர்.

    இதேபோல் பானுநகர் 8-வது அவென்யூ, 10-வது அவென்யூ பகுதியில் உள்ள மளிகை கடைகளின் பூட்டையும் கொள்ளையர்கள் கடப்பாரையால் உடைத்துள்ளனர்.

    10-வது அவென்யூ மளிகை கடையில் ஒரு பூட்டை மட்டும் கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். இன்னொரு பூட்டை உடைக்க முடியவில்லை.

    இதேபோல் பானுநகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள செல்போன் கடைக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவை உடைத்து விட்டு கடையின் பூட்டை உடைத்து உள்ளனர். கொள்ளையர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்துள்ளது கேமிராவில் பதிவாகி உள்ளது.

    பானுநகரில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சோழவரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    செங்குன்றம்:

    செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது24).

    ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சோழவரத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சோழவரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரமேசின் நண்பர்களே அவரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தர விட்டார். இதையடுத்து செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன் மேற் பார்வையில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.

    இதனைதொடர்ந்து ரமேசை வெட்டிக் கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவரது நண்பர்களான வீரராகவன், விஜய், வெங்கடேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வினோத், அரவிந்தன் ஆகிய 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரமேசுக்கும், அவரது நண்பரான அரவிந்தனுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது.

    அப்போது அரவிந்தனை ரமேஷ் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட விரோதம் காரணமாக ரமேஷ் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த வாரம் முதல் மைதிலி திடீரென மாயமானார்.
    • மைதிலி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், பூங்கா வனபுரம், 1- வது தெருவில் வசித்து வருபவர் மணி மாறன். இவரது மனைவி மைதிலி (வயது 34). திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மணிமாறன் தேனாம்பேட்டையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவர், வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த வாரம் முதல் மைதிலி திடீரென மாயமானார். அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது கணவர் மணிமாறன் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மணலி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் அருகே மைதிலி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தகவல்தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

    கடந்த புதன்கிழமை மைதிலி, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே வந்து இறங்கியதாக தெரிகிறது. இதனை கவனித்த கணவர் மணிமாறன் மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் மைதிலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு மணலி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் அருகே இறக்கி விட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் மைதிலி அப்பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

    அந்த இடத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மைதிலி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக மணி மாறனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொன்னேரி அருகே உள்ள சைனாவரம் பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார்.
    • பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள சைனாவரம் பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். இவர் வீட்டின் வெளியே தான் வளர்த்து வரும் கோழிகளை அடைத்து வைத்து இருந்தார்.

    இன்று அதிகாலை இவரது வீட்டின் வெளியே அடைக்கப்பட்டு இருந்த கோழிகளை முகமூடி அணிந்த 4 மர்மநபர்கள் திருடினர்.

    சத்தம்கேட்டு மதன்குமார் வெளியே வந்ததும் கோழிகளை திருடிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் அதிகஅளவில் திரண்டதால் அவர்கள் ஏற்கனவே வேறு இடத்தில் திருடி கொண்டு வந்த 10-க்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன், மதுபாட்டில் ஆகியவற்றை அங்கே போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மகும்பல் விட்டு சென்ற செல்போன், மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சந்தோஷ், பிரேம்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு கொரட்டூர் பகுதியில் பதுங்கி இருந்த பேசின் பிரிட்ஜ், கே.பி. பார்க் பகுதியை சேர்ந்த தவக்களை என்கிற சந்தோஷ், பிரேம்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இதுபோல் கூட்டாளிகளுடன் சேர்ந்து பட்டினப்பாக்கம், வியாசர்பாடி, எம்.கே.பி நகர், அடையாறு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 செல்போன், கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • மாத்திரை மருந்துகள் பயன்படுத்தும் விதம், பரிசோதனைகள், குறித்து கேட்டறிந்தனர்.
    • 1400 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ள பொது மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தேவையான மருத்துவ சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த நிலையில் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சி பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடு, வீடாக சென்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்கள் குறித்தும், அவர்களது நோயின் தன்மை , தேவையான மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது.

    மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சளி இருமல் காய்ச்சல், உள்ளிட்ட நோய்களுக்கான அறிகுறிகள் குறித்து கேட்டறிந்து பரிசோதனை செய்தனர். மேலும் மாத்திரை மருந்துகள் பயன்படுத்தும் விதம், பரிசோதனைகள், குறித்து கேட்டறிந்தனர்.

    இதில் சுகாதார மேற்பார்வையாளர் பால கிருஷ்ணன், ஊராட்சித் தலைவர் மாலதி சரவணன், மருத்துவ அலுவலர் அன்புச் செல்வி, செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்ததிட்டத்தில் 1400 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் 800 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • 3200 பணியாளர்கள் மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க கொரோனோ தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1859 இடங்களில் கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 800 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 3200 பணியாளர்கள் மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் மட்டும் 12 தடுப்பு முகாமில் 57 பேர் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை நடந்த 32 கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 16லட்சத்து 99 ஆயிரத்து 904 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1,059 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தடுப்பூசி முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்எச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

    18 முதல் 59 வயதினருக்கு செப்டம்பர் 30-ந்தேதி வரை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கூறி உள்ளார்.

    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு போது மான அளவுக்கு உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும்.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு போது மான அளவுக்கு உள்ளது. புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய 5 நீர்த் தேக்கங்களிலும் 70 சதவீதத் துக்கும் அதிகமாகவே தண்ணீர் இருப்பு காணப்படுகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் சென்னை மாநகரையொட்டியுள்ள புழல் நீர் தேக்கத்தின் மொத்த உயரம் 21.20 அடியாகும். இதில் தற்போது 19.80 அடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3,300 கன அடி ஆகும். இதில் 2,972 கன அடி தண்ணீர் தற்போது உள்ளது.

    சோழவரம் ஏரியின் மொத்த அடி 18.86 அடியாகும். இதில் மட்டும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. 2.97 அடி நீர் இருப்பு இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். இதில் 22.20 அடி தண்ணீர் உள்ளது. 3,645 கன அடி நீர் கொள்ளவை கொண்ட இந்த நீர் தேக்கத்தில் 3,172 கன அடி தண்ணீர் உள்ளது.

    பூண்டி நீர் தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாகும். இதில் 27.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3,231 கன அடி இருக்கும் நிலையில், தற்போது 1,229 கன அடி தண்ணீர் உள்ளது.

    தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தின் மொத்த உயரம் 36.61 அடியாகும். இது முழு கொள்ளளவுடன் காட்சி அளிக்கிறது.

    இதன் மூலம் இந்த நீர் தேக்கங்களில் இருந்து சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    • பல ஆண்டுகளாக வேலை செய்யும் ஒப்பந்த பெண் தொழிலாளருக்கு பி.எஃப் வழங்கப்படாததை கண்டித்து பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு முறையாக ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பி.எஃப் தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அதனால் அடிக்கடி நிறுவனத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    மேலும் இது குறித்து நிர்வாகத்திடம் கேட்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட்டு, வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பி.எஃப் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திரதாசன், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் தொழிற்சாலைக்கு விரைந்து வந்து மனிதவள மேலாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    ×