என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரியபாளையம் கோவிலில் வேப்பஞ்சேலை அணிந்து சுற்றி வந்தபோது பெண் திடீர் மரணம்
- கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் இறந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெண்ணுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. பெண் பக்தர்கள் வேப்பிலையை அணிந்து கோவிலை சுற்றி வந்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூரை சேர்ந்த காந்திமதி (வயது 58) என்பவர் வேப்பஞ்சேலை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அவர் கோவிலை சுற்றி வலம் வந்த போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் இறந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்