என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
    X

    அம்பத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

    • சந்தோஷ், பிரேம்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு கொரட்டூர் பகுதியில் பதுங்கி இருந்த பேசின் பிரிட்ஜ், கே.பி. பார்க் பகுதியை சேர்ந்த தவக்களை என்கிற சந்தோஷ், பிரேம்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இதுபோல் கூட்டாளிகளுடன் சேர்ந்து பட்டினப்பாக்கம், வியாசர்பாடி, எம்.கே.பி நகர், அடையாறு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 செல்போன், கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×