search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்கள் பணி மாறுதலால் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்
    X

    கோப்புபடம்.

    ஆசிரியர்கள் பணி மாறுதலால் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம்

    • அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது
    • பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை.

    திருப்பூர் :

    கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குறிப்பாக நகர்ப்புறங்களை ஒட்டிய ஊராட்சிப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித் திருக்கிறது.

    பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. 70, 80 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை கூட, சில பள்ளிகளில் காணப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டடம் இல்லை.இதனால் ஒரே வகுப்பறையில், 60, 70 மாணவர்களை அமர்த்தி பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. சில பள்ளிகளில், பள்ளி வளாகங்களில் உள்ள மரத்தடியில் அமர்த்தி பாடம் கற்பிக்கின்றனர்.பாடம் கற்பிக்கும் பணி மட்டுமின்றி, மாணவர்களின் வருகை துவங்கி, பாட போதிப்பு தொடர்பான விவரங்களை அதற்கான பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணியையும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது.இதனால் அதிக பணிச்சுமை, நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் கல்வி போதிப்பில், முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நெருக்கடியான சூழலில் பணிபுரிய விரும்பாத ஆசிரியர்கள் பலர், பணி மாறுதல் பெற்று செல்கின்றனர்.

    இதனால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையால் சிரமத்தை எதிர்கொண்டுள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது.எனவே பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×