என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • இரு மையங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது
    • கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023 ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் மாவட்ட கலெக்டர் வழிகாட்டு தலின்படியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனை படியும் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பனப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி ஆகிய இரு மையங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த மையங்கங்களில் நீட் தேர்வு பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 12 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும், 4 மாணவர்கள் பி.டி.எஸ் படிப்பிற்கும் என மொத்தம் 16 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.

    இவர்களுக்கு கலெக்டர் வளர்மதி புத்தகங்கள் வழங்கி பராட்டினார்.

    அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட போட்டித்தேர்வு ஒருங்கிணை ப்பாளர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், மகன் சூரிய பிரகாஷ் (23) இவர் சென்னையில் வேலை செய்து வந்தவர்.

    விடுமுறையில் ஊருக்கு வந்த சூரிய பிரகாஷ் நேற்று மதியம் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், குமரன் ஆகியோருடன் கிணற்றில் குளிப்பதற்காக அருகே உள்ள தெங்கால் கிராமத்திற்கு சென்று அங்கு தனியார் கிணற்றில் குளித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக சூரிய பிரகாஷ் நீரில் மூழ்கியுள்ளார் இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அங்கு விரைந்து சென்று வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய சூரிய பிரகாஷை பிணமாக மீட்டனர்.

    இதை தொடர்ந்து சிப்காட் போலீசார் சூரிய பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சுஜாதாவினோத் தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஆணையாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகரசபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பாலாற்றின் கரையோரம் உள்ள டாஸ்மாக் மது கடையை அகற்ற வேண்டும்,கடை அருகில் உள்ள காரிய மேடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.காரிய மேடையை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    சுடுகாட்டில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை பயன்படுத்தப்படாமல் உள்ளது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    நகராட்சி பகுதியில் நடைபெறும் குடிநீர் குழாய் அமைப்பு பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    நகராட்சி பகுதியில் தெரு நாய்களை பிடித்து முறையாக கருத்தடை செய்ய வேண்டும்.

    நகரில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் நம்ம டாய்லெட் கழிவறைகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் நகர மன்ற தலைவர்,துணைத் தலைவர், உறுப்பினர்களுக்கு கடந்து ஜூலை மாதம் முதல் மதிப்பூதியம் வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர சபை உறுப்பினர்கள் அப்துல்லா, வினோத், கே.பி.சந்தோஷம், குமார்,நரேஷ், ஜோதி சேதுராமன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 135 வது ஆண்டு அக்னி வசந்த விழா
    • பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலின் 135 வது ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும், மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.பின்னர் மாலையில் தீ மிதி விழாவும் நடைபெற்றது. இதில் காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அடுப்பில் இருந்த தீ பரவி எரிந்தது
    • தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் பைராகி மடம் தெருவை சேர்ந்தவர் சரளா (37), கூலித் தொழிலாளி. இவரது, வீட்டின் மேல்மாடியில் இருந்த அறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திடீரென தீ வி பத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. இதனை வெளியில் இருந்தபடி பார்த்த பொதுமக்கள் சோளிங்கர் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில், சோளிங்கர் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வீட்டில்இருந்தவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது குறித்து தெரியாமல் இருந்துள்ளது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உயிரை பொருட்படுத்தாமல் விரைந்து மாடிக்கு சென்று, குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், எரிந்து கொண்டி ருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டடது. தீ விபத்தில் யாருக்கும் எவ்வித அசம் பாவிதமும் ஏற்படவில்லை.

    விசாரணையில், வெந்நீர் காய வைப்பதற்காக மாடி மீது அடுப்பு பற்ற வைத்துவிட்டு, நெருப்பை சரியாக அணைக்காமல் விட்டுள்ளனர். இதனால், அடுப்பில் இருந்த நெருப்பு பரவி விறகுகளில் தீப்பிடித்தது தெரியவந்தது. சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பின்னர் திரும்பி சென்று விட்டனர். உரிய நேரத்தில் விரைந்து வந்து தீயை அணைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • முன்பக்க கண்ணாடி உடைந்தது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவை அடுத்த மருதாலம் கூட்ரோடு பகுதியில் கடந்த 28-ந் தேதி நெய்வேலியில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.கவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக திருத்தணியில் இருந்து வேலூர் நோக்கி செல்வதற்காக வந்த அரசு பஸ் மீது கற்கள் வீசப்பட்டது.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் பஸ்மீது கல் வீசி தாக்கியதாக ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரியை சேர்ந்த மணிவண்ணன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    • திருமணம் ஆகி 7 மாதங்களே ஆன நிலையில் விபரீதம்
    • சப்- கலெக்டர் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரமணன் மகள் ஈஸ்வரி (வயது 33). இவருக்கும் சென்னையை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. தம்பதிகள் சென்னையில் வசித்து வந்தனர்.

    ஆடி மாதத்தையொட்டி அவரது பெற்றோர் ஈஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஈஸ்வரி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்ட ஈஸ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று ஈஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 7 மாதங்களே ஆவதால் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் டிராபி வருகிற 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதற்கு முன்பு 2007-ல் சென்னையில் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி நடைபெற்றது. தற்போது 16 வருடங்கள் கழித்து நடைபெறுகிறது .

    இதை தொடர்ந்து 7 - வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் 2023-க்கான கோப்பையை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சென்று அறிமுகம் செய்யும் விழா நடைபெற்று வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜி.கே.உலகப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட கோப்பையை கலெக்டர் வளர்மதி தலைமையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கோப்பையை வரவேற்று அறிமுகப்படுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டையில் முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கோ ப்பையை கோலாகலத்துடன் வழிஅனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, ஜி.கே. உலகப் பள்ளி மேலாண்மை இயக்குநர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா, ஹரிணி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ராசாக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை
    • பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முடிவு

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகே அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு வேளியநல்லூர், பிள்ளைப்பாக்கம், ரெட்டிவலம் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு சைக்கிள் பாகங்களை ஏற்றிவந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளியின் நுழைவு வாயில் மீது மோதியது.

    இதில் சேதம் அடைந்த நுழைவு வாயில் இடிந்து விழும் நிலையில் இருந்தது.

    மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நுழைவு வாயிலை இடிக்க பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முடிவுசெய்யப்பட்டது.

    அதன்படி நேற்று பொக்லைன் எந்திரம் கொண்டு நுழைவு வாயில் இடித்து அப்பு றப்படுத்தப்பட்டது.

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் முருகன், மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது 28).

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்த தாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இருவருக் கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்தம்மாள் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான ஆற்காடு அடுத்த கரிவேடு கிராமத்திற்கு சென்றுள்ளார்.

    நேற்று காலை வீட்டின் அருகே இருந்த விஷத் தழையை அரைத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு லாட புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந் துவிட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி மற்றும் காவேரிப்பா க்கம் ஆகிய வட்டாரங்களை சார்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவிக் குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தில் 10 சதவிகிதம் பயனாளிகளின் பங்களிப்பு, 60 சதவிகித வங்கிகடன், 30 சதவிகித திட்ட மானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்ப டையில் தொழில்கடன் வழங்கப்பட உள்ளது.

    ரூ.5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண் தொழிலாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையுள்ள தொழில்திட்டம் குறு தொழிலாகவும், ரூ.15 லட்சத்திற்கும் மேலான தொழில்திட்டம் சிறு தொழிலாகவும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

    சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.திட்டத்தில் சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவிகிதம் மட்டுமே பயனாளி களின் பங்களிப்பாக இருந்தால் போதுமானது.

    இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில்மைய அலுவலர்களை (செல்-9344672756) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் இந்து முன்னணி சார்பில் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு நடைபெற்றது.

    மாநாட்டிற்கு இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்ரமணியம் தலைமை தாங்கினர்.

    மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்து முன்னணி வழக்கறிஞர் அமைப்பின் மாநில செயலாளர் ரத்தினகுமார் வரவேற்று பேசினார்.

    வேலூர் வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயபிரகாஷ் ,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டில் வரவேற்பு குழு வக்கீல்கள் குணசேகர், குமார், தியாகராஜன், சுரேஷ், இந்து முன்னணி நிர்வாகிகள் மகேஷ்,ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×