என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த பள்ளி நுழைவு வாயில் இடித்து அகற்றம்
    X

    சேதமடைந்த பள்ளி நுழைவு வாயில் இடித்து அகற்றம்

    • மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை
    • பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முடிவு

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகே அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு வேளியநல்லூர், பிள்ளைப்பாக்கம், ரெட்டிவலம் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு சைக்கிள் பாகங்களை ஏற்றிவந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளியின் நுழைவு வாயில் மீது மோதியது.

    இதில் சேதம் அடைந்த நுழைவு வாயில் இடிந்து விழும் நிலையில் இருந்தது.

    மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நுழைவு வாயிலை இடிக்க பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முடிவுசெய்யப்பட்டது.

    அதன்படி நேற்று பொக்லைன் எந்திரம் கொண்டு நுழைவு வாயில் இடித்து அப்பு றப்படுத்தப்பட்டது.

    Next Story
    ×